| கொங்கை குடங்கொட்டு பாலருவி யாடும் | | குமாரநா யகன்வருகவே | | குரவுகமழ் தருகந்த புரியிலருள் குடிகொண்ட | | |
வேறு 405. | பைந்தண் கமல வட்டவணைப் | | பாவை யனையார் பூவிரியும் | | பசுமென் குழற்கூட் டகிற்புகையின் | | படல மூட முடைநறவின் | | கந்தம் பொதிந்த செந்துவர்வாய்க் | | கடைசி மகளிர் செந்நெலைப்பைங் | | கன்ன லெனவுங் கன்னலைப்பூங் | | கமுக மெனவுங் கடைக்கூடாத் | | தந்தங் கருத்துக் கமைந்தபடி | | சாற்றிச் சாற்றி முழுமாயச் | | சலதி மூழ்கித் தடுமாறும் | | சமயத் தவர்போற் றலைமயங்கும் | | அந்தண் பழனக் கந்தபுரிக் | | கரசே வருக வருகவே | | அருளா னந்தக் கடற்பிறந்த | | |
405. (அடி, 1) கமல வட்ட அணை - தாமரை மலராகிய வட்ட மெத்தை (34.) குழலுக்கு ஊட்டுகின்ற.
(1-2) முடை நறவின் கந்தம் - மாமிசம் கள் இவற்றின் நாற்றம். கன்னல் -கரும்பு. செந்நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகெனவும் எண்ணியது புகை மூடியிருத்தலின் (375.) கடைக்கூடா - முடிவுபெறாத.
(3) சலதி - கடல். சமயத்தவர் - சமயவாதிகள்.
(4) அருளானந்தக்கடல் - சிவபெருமான் (410.)
|