சந்தவிருத்தம் 408. | உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே | | உருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமே | | கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே | | கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே | | அலகில் புவம முடியும் வெளியி லளியு மொளியி னிலயமே | | அறிவு ளறிவை யறியு மவரு மறிய வரியபிரமமே | | மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே | | வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே. | 407. காமன் படையாகிய மகளிர் நிரம்பி யிருத்தலின் காமனுக்கு உரிய படைவீடென்னும் பொருளும் வேளூர் என்பதற்கு அமையுமென்பது இதிற் கூறப்படும்.
(அடி, 1) மகளிர் உறுப்புக்களிற் சிலவற்றைப் படைக்கலங்களாகவும் சிலவற்றைத் தேர் முதலிய படைகளாகவும் உருவகம் செய்கின்றார்; 120. நாமம் - அச்சம்.
(2) களிறு : நகில்.
(3) கை - படையின் பக்கம்; படைவகுப்புமாம். அப்பெயரென்றது வேளூரென்பதைச் சுட்டியது.
408. (சந்தக் குழிப்பு.) தனன தனன தனன தனன தனன தனன தனதனா.
(அடி, 1) உணர்வு - அறிவு. உதயம் - சூரியோதயம்.
|