பக்கம் எண் :

306குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர்
   செஞ்சடைக் கருமிடற்றுத்
தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலைத்
   திருவைப் புரக்கவென்றே.        
(6)

 
10.
வெள்ளித் தகட்டுநெட் டேடவிழ்த் தின்னிசை
   விரும்புஞ் சுரும்பர்பாட
விளைநறவு கக்கும் பொலம்பொகுட் டலர்கமல
   வீட்டுக் கொழித்தெடுத்துத்
தெள்ளித் தெளிக்குந் தமிழ்க்கடலி னன்பினைந்
   திணையென வெடுத்தவிறைநூற்
றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதி மத்தினிரு
   சீறடி முடிப்பம்வளர்பைங்
கிள்ளைக்கு மழலைப் பசுங்குதலை யொழுகுதீங்
   கிளவியுங் களிமயிற்குக்
கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி
   கிஞ்சுகக் சூட்டரசனப்
பிள்ளைக்கு மடநடையு முடனாடு மகளிர்க்கொர்
   பேதைமையு முதவிமுதிராப்
பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொருபாண்டிப்
   பிராட்டியைக் காக்கவென்றே.    
(8)

    (4) செஞ்சூட்டு - சிவந்த உச்சிக்கொண்டை; ஓதிம மென்றதற்கேற்ப இது கூறப்பட்டது. தடாதகைப்பிராட்டியார் திக்குவிசயம் செய்தபொழுது கைலைக்கும் சென்று சிவபெருமான் முன் நின்றதை யெண்ணி, ‘தேவுக்கு முன்னின்ற தெய்வம்’ என்றார்.

    10. (அடி, 1) வெள்ளித்தகட்டைப் போன்ற நெடிய இதழ்களை; என்றது வெண்டாமரையின் இதழ்களை. அவிழ்த்து - மலர்த்தி. கக்கும் - சொரியும்.

    (2) தெள்ளித் தெளிக்கும்: 702. அன்பினைந்திணையென எடுத்த இறைநூல் - அன்பினைந்திணை யென்னுந் தொடக்கத்தையுடைய இறையனாரகப் பொருளென்னும் இலக்கணம். நூலாகிய அமுது; “அன்பினைந் திணையென் றறுபது சூத்திரம், கடலமுதெடுத்துக் கரையில்வைத்ததுபோற், பரப்பின் றமிழ்ச்சுவை திரட்டிமற் றவர்க்குத், தெரிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள்” (கல்.) கமலவீட்டின் கண் அமுதத்தைக் கூட்டுணுமென்க. வெள்ளோதிமம் - கலைமகள். கலைமகளுக்கு வெள்ளை யன்னம் உவமை: 324, 706.

    (3) கிள்ளைக்குக் கிளவி கற்பித்தல்: 663. நவ்வி - மான். கிஞ்சுகச் சூட்டு - முருக்கம் பூவைப்போன்ற உச்சிக்கொண்டையையுடைய.

    (4) பிள்ளைமை - இளமைப்பருவம்.