410. | மண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு |
| மதிக்கடவு ளெனவருதலால் |
| வானாறு தலைமடுக் கப்பொங்கு மானந்த |
| தண்டலில் கொடிச்சிவாய்க் குமுதம்விள் ளக்கரத் |
| தாமரை முகிழ்த்திடுதலாற் |
| சகலபுவ னத்திலு முயிர்ப்பயிர் தழைப்பயநற் |
| றண்ணளி சுரந்திடுதலால் |
| துண்டமதி நதியொடு பொதிந்தவே ணிப்பரஞ் |
| சோதிகட் பொறியாதலால் |
| தோன்றலிவ னின்னையொத் துளனா னினக்குமொரு |
| துணையிவன் போலில்லைகாண் |
| அண்டரண் டத்தொடகி லாண்டம் படைத்தவனொ |
| டம்புலீ யாடவாவே |
| அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் |
| |
411. | சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் |
| தோகைமேல் கொண்டருளினாய் |
| தோற்றிமுன் பொங்கிமலை போலவலை மோதுமச் |
| சோதிவே லையுமுகந்தாய் |
கங்கை. தலைமடுக்க - சேர. சிரத்திலே சேர்த்த. பொங்கு மானந்த மாக்கடல் -மேலெழும் முழங்குகின்ற சங்குகளையுடைய பெரிய கடல்; பொங்கிய ஆனந்தமாகிய பெரிய கடல்போன்ற சிவபெருமான் (405). ஆல் - முழக்கம்; நந்த - சங்குகளையுடைய.
(2) கொடிச்சி வாய்க்குமுதம் விள்ள - கொடியின்கண் உள்ள குமுத மலர் மலர; கொடிச்சி - கொடி; கொறுக்கை, கொறுக்கைச்சியென நின்றது போன்றது; குறமகளாகிய வள்ளி நாயகியாரது திருவாய் மலரும்படியென்பது இரண்டாவது பொருள். கரத்தாமரை முகிழ்த்திருதலால் - ஒளியையுடைய தாமரை மலர் குவிதலால்; கரம் - ஒளி; திருக்கரமாகிய தாமரை அஞ்சலி செய்வதாலென்பது இரண்டாவது பொருள். உயிர்ப் பயிர் - உயிரையுடைய பயிர்கள், ஆன்மாக்களாகிய பயிர்கள். சந்திரனால் பயிர்கள் தழைத்தலின் அவனைய் சசியாதிபதியென்பர்.
(3) சோதி - சிவபெருமான். கட்பொறி - கண்ணாகிய இந்திரியம். கண்ணிலிண்டாகிய தீப்பொறிகள்.
(4) அண்டரண்டம் - தேவருலகம்.
411. (அடி, 1) சொல் தரு பெரும்புலவர் - புகழைப் பெற்ற பெரிய தேவர், சொல்லைத் தருகின்ற பெரிய புலவர்கள். கலையமுதுகொள விருந்தோகைமேல் கொண்டருளல் - கிரணமாகிய அமுதத்தை விருந்தாகக் கொள்ள மகிழ்ச்சியைக் கொள்ளல், சாத்திரங்களாகிய அமுதத்தைக் கொள்ளக் கரிய மயிலின்மேல் எழுந்தருளி யிருத்தல்; “அமர ருண்டி”