பக்கம் எண் :

308குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

குற்றமில் குணத்தைக் குறித்தவிர வலர்முகம்
    கோடா தளித்தல்செய்தாய்
கோகனக நாயகன் வரக்கூ விடுங்குக்
    குடங்கொடிய தாகவைத்தாய்
உற்றிடு மிதழ்க்குமுதம் விண்டுதண் டேனொழுக
    ஒளிநிலா நகைமுகிழ்த்தாய்
உன்செய்கை யெம்பிரான் றன்செய்கை போலுமால்
    உனையுமிவ னொவ்வாதிரான்
அற்பொதி களத்தவ னளித்தகும ரேசனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(2)

412.
கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக்
    கண்ணினுண் மணியிவன்காண்
கலைகள்சில நிறைதிபின் குறைதியிவ னென்றுமொண்
    கலைமுழுது நிறையநின்றான்

(பரிபாடல், 11 : 35) என்று சந்திரன் கூறப்படுதல் காண்க. மலைபோல அலைமோதுமச் சோதிவேலையும் உகந்தாய் - மலையைப் போலப் பெரிய அலைகளை மோதும் அந்த ஒளியையுடைய கடலையும் விரும்பினாய்; முருகக் கடவுளுக்கு, மலையையும் அதனைப்போலக் கடலையும் ஊடுருவிய ஒளியையுடைய வேற்படையை விரும்பிய செயலைக் கொள்க.

    (2) இரவலர் முகங் கோடாது - இரவிலே மலரும் மலர்கள வாடாமல், யாசகர்களுடைய முகம் கோணாமல். கோகனக நாயகன் - சூரியன். குக்குடம் - கோழி. கொடியதாக - கொடுமையை யுடையதாக; பகைப் பொரொளாக வென்றபடி. துவசமாக வென்பது முருகக் கடவுளுக் கேற்பக் கொள்ளும் பொருள்.

    (3) குமுதம் விண்டு தண்டேன் ஒழுக - குமுதமலர் மலர அதிலிருந்து தண்ணிய தேன் ஒழுக, வாயிலிருந்து நீர் ஊற. நிலா நகை - நிலாவாகிய ஒளி, நிலாவைப் போன்ற நகை.

    (4) அல் - இருட்டு; இங்கே கருமை.

    412. இதுமுதல் இரண்டு பாடல்களிற் பேதம் கூறப்படும்.

    (அடி, 1) அடிகள் - சிவபெருமான். கலைகள் - கிரணங்கள். கலைமுழுதும் - சாத்திரங்கள் முழுவதும்.