பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்309

எங்குமிர வோவெனத் திரிதியிவ னடியவர்
    எவர்க்குமிர வினையொழித்தான்
இருநிலத் தங்குரிக் கும்பயிர் வளர்த்தியிவன்
    எவ்வுயிரும் வாழச்செய்தான்
பொங்ககுமுத மமுதா சனர்க்குதவி னாயிவன்
    புத்திமுத் தியுமளித்தான்
புவனம் படைத்தவிவ னின்னின்மிக் கானெனப்
    புகல்வதோர் பொருளன்றுகாண்
அங்கண்மறை யோலிட் டரற்றிநின் றவனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(3)

413.
பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட்
    படலங் கிழிப்பதுணராய்
பனிவிசும் பிற்பொலிவ தொன்றலாற் புவனப்
    பரப்பெலாம் பொலிவதோராய்
சேயிதழ்க் குமுதந் திறப்பதல் லாதுளத்
    திருமலர் திறக்கவறியாய்
சிறைவிரி சகோரப்பு ளன்றியெவ் வுயிரும்
    திளைத்தின்ப மாரச்செயாய்

    (2) இரவோன் - இராத்திரிக்குரியவன்; யாசகஞ் செய்பவனென்பது வேறு பொருள். அங்குரிக்கும் - முளைக்கும். சந்திரன் ஓரறிவுயிர்கள் வாழச் செய்தலும் முருகக் கடவுள் எல்லாவுயிர்களும் வாழச் செய்தலும் இங்கே வேற்றுமை.

    (3) அமுதாசனர் = அமுத அசனர் - அமுதத்தை உணவாகவுடைய தேவர்கள்; முன்னரே அமுதத்தை உண்டவர்களுக்கு நீ அமுதமுதவினா யென்பதுபட நின்றது. புத்தி முத்தி - போகமும் மோக்ஷமும்.

    (4) ஓலிட்டு - ஓலமிட்டு; முழங்கி.

    413. (அடி, 1) இருட் போதத்து - இராப்போதில். அகவிருட்படலம் - அகவிருளாகிய அஞ்ஞானத்தின் பரப்பு.

    (2) உளத்திருமலர் - இதயமாகிய தாமரை. சகோரப்புள் நிலவை யுண்ணுதல்: 102, 382.