பக்கம் எண் :

310குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நீயிவற் கொப்பன்மை செப்புவதெ னிப்பரிசில்
    நின்பெருந் தவமென்சொல்கேன்
நெடியவன் முதற்றேவர் குறுகிநிற் பவுமுனை
    நினைத்தழைத் தருளினன்காண்
ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவனொ
    டம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(4)

414.
தருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத்
    தலைத்தலை மயங்கத்தொகும்
சன்னிதி யடைந்தவர்கள் பையுணோய் முற்றும்
    தவிர்ந்தக மகிழ்ந்துதவிராக்
கருமன்னு மூழிப் பெரும்பிணியு மாற்றிடுதல்
    கண்டனை யிருத்தியானின்
கயரோக முடன்முயற் கறையுந் துடைத்திடக்
    கருதிடுதி யேலெம்பிரான்
திருமுன்ன ரள்ளியிடு வெண்சாந்து மற்றைத்
    திருச்சாந்து நிற்கவற்றாச்
சித்தாமிர் தத்தடத் தீர்த்தத் துறைக்குறுந்
    திவலையொன் றேயமையுமால்      

    (1-2) சந்திரன்பால் இல்லாதனவாகக் கூறப்பட்ட இயல்புகளும் செயல்களும் முருகக் கடவுள்பால் உள்ளவை.

    (3) குறுகி - தன்னை அடைந்து. நெடியவன் குறுகி நிற்பவென்றது முரண்.

    414. இது முதல் இரண்டு செய்யுட்களில் தானம் கூறப்படும்.

    (அடி, 1) தரு - கற்பக விருட்சம். பொன்னுலகு - தேவலோகம். பையுள் நோய் - துன்பத்தைத் தரும் நோய்.

    (2) கரு மன்னு ஊழிப் பெரும் பிணி - கருப்பையில் தங்குவதாகிய நெடுங்காலமாக வரும் பிறவி நோய். கயரோகம் - நாளுக்கு நாள் குறைதலாகிய நோய். முயற்கறை - முயலாகிய களங்கம்.

    (3) வெண் சாந்து - விபூதி; இது திருக்கோயிலிலுள்ள விபூதிக் குண்டத்திலிருந்து எடுப்பது. மற்றைத் திருச்சாந்தென்றது அங்க சந்தானத் தீர்த்ததினின்றெடுக்கும் மண்; இம்மண்ணை உண்டோர் நோய் நீங்கிச் சுகமுறுதல் கண்கூடு. சித்தாமிர்தம்: ஆலயத்துள்ளது; தீர்த்தங்களுள் தலைமை பெற்றது.