பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்311

அருவென்ன வுருவென்ன வன்றென்ன நின்றவனொ 
    டம்புலீ யாடவாவே 
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் 
    அம்புலீ யாடவாவே.    
(5)

415.
ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப
    தொருதெய்வ முண்டெனவெடுத்
துரையாலுணர்த்துவதை யொழியவெவ ரெவரெகட்கும்
    ஊன்கண் ணுளக்கண்ணதாம்
விழியாக முன்னின்று தண்ணளி கரந்தவர்கள்
    வேண்டிய வரங்கொடுப்பான்
மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில்
    வேறில்லை யென்றுணர்தியாற்
பொழியாத புயறங்கு புவனமுந் திசைமுகப்
    புத்தேள் பெரும்புவனமும்
பொன்னுலகு மண்ணுலகு மெவ்வுலகு வேண்டினும்
    பொருளன் றிவற்குமற்ற
அழியாத வீடுந் தரக்கடவ னிவனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுலி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(6)

416.
நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர்
    நிரைததூணம் வீக்கியார்த்து
நிற்குங் குறட்பூத மொன்றினை விடுத்துடலின்
    நெடியபழு வென்புநெரியக்

    415. (அடி, 1) ஊன்கண் - புறக்கண்.

    (2) மெய்கண்ட தெய்வம் - உண்மையாகக் கண்ணிற் கண்ட கடவுள்; “கண்கண்ட தெய்வம்” (709) என்பதுபோல நின்றது.

    (3) பொழியாத புயல்: திருமால். அவர் தங்கு புவனம் வைகுண்டம். திசைமுகப் புத்தேள் - பிரமலோகம்.

    416. இது முதல் தண்டம் கூறப்படும்.

    (அடி, 1-2) வைத்தீசுவரன் கோயிலில் பிசாசினாற் பீடிக்கப்பட்டார் வழிபட்டு அதினின்றும் நீங்கி அருள்பெறுஞ் செய்திலா நினைந்து இது கூறினார்.