பக்கம் எண் :

312குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டெனப் பிடியெனக் கொடிறுடைத் தடியெனக்
    கணநாதர் கடுகமுடுகிக்
கடல்வாய் திறந்தெனப் பிலவாய் திறந்தலறு
    காட்சிநீ காணாயலை
மட்டுடைத் தூறுந் தடங்கமலன் முதலியோர்
    வாய்புதைத் தஞ்சிநிற்ப
வருகென் றழைத்திடவும் வாரா திருத்தியால்
    மற்றிவன் முனிந்தாலுனக்
கட்டதிக் கினிலுமொரு திக்கிலையெ னையனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.        
(7)

417.
குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர
    குடித்திட விடுத்துநின்றான்
குண்டிகைக் கள்வனைக் குடுமித் தலைப்பசுங்
    குருதிபொங் கப்புடைத்தான்

    கரும்பேய்கள்: எழுவாய். மயிராகிய வரிசையாயுள்ள தூண்கள். பழுவென்பு - விலா வெலும்பு. கொடிறு உடைத்து அடி - கன்னத்தில் அறை. கணநாதர் பூதமொன்றினை விடுத்துக் கடுக. பேய்கள் வாய் திறந்து அலறு காட்சி.

    (3) கமலன் - பிரமதேவர்.

    (4) திக்கு - புகலிடம்; “திக்குவே றில்லை நீயே” (இராம நாடகம்.)

    417. இதன்கண் முருகக் கடவுள் இயற்றிய நிக்கிரகச் செயல்கள் கூறப்படும்.

    (அடி, 1) குடுமி - உச்சி. வேற்படை குன்றை யூடுருவிச் சென்ற அப்பொழுதே அதன்கண் மறைந்து நின்ற சூரனையும் ஊடுருவியதென்பது ஒரு சாரார் கொள்கை; அதற்கேற்ப இங்கே பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; “ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடறப், பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்” (தக்க. 5) என்பதையும் அதன் உரை முதலியவற்றையும் பார்க்க. குண்டிகைக் கள்வன் - பிரமதேவர்; குண்டிகை - அவர் கையிலுள்ள நீர்க் கரகம்.