| இன்றைக் குழந்தையென் றெண்ணாது குலிசன்முதல் | | எண்மரும் பிறருமொருஞான் | | றெதிர்நின் றுடற்றியவர் பட்டபா டறியா | | திருத்தியலை யதுகிடக்க | | முன்றக்கன் வேள்விக் களங்கொலைக் களமென்ன | | முடியமரர் மொத்துண்டநாள் | | முழுமதிக் கடவுணீ யவமதிப் புண்டது | | மொழிந்திடக் கடவதன்றால் | | அன்றைக் கணக்கின்றும் வந்திருக் கின்றதினி | | அம்புலீ யாடவாவே | | அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் | | |
418. | தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் | | தடங்கரை விடுப்பவனுனைத் | | தலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடிற் | | றண்ணளி சுரந்துகருணை | | வெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன் | | வெகுளாது விடினுமழுது | | விழிசிவப் பக்காணி னிரவிபகை சாய்த்தவிள | | வீரன் பொறுப்பானலன் | | கள்ளம் பழுத்தகட் கடையியர் சிறார்திரைக | | காவிரித் தண்டுறைதொறும் | | கதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக் | | கலைமதிக் கலசவமுதை |
(2) குலிசன் - இந்திரன், எண்மர் - திக்குப் பாலகர் எட்டுப் பேர் (பரி. 5:51-6)
(3) தக்கயாகத்தில் வீரபத்திரக் கடவுள் சந்திரனைத் தேய்த்தருளினார்.
(4) கணக்கு - நியாயம்; “கலிப்பாவென் றோதல் கணக்கோ” (தமிழ்விடு. 81.)
418. (அடி, 1) பவக்கடல் - பிறவியாகிய கடல்.
(2) இரவி பகை - பானுகோபன். அவனைச் சாய்த்த இளவீர னென்றது வீரவாகு தேவரை.
|