பக்கம் எண் :

314குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழைவரு கந்தனுடன்
    அம்புலீ யாடவாவே.    
(9)

419.
தன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும்
    தாணிழற் கீழ்நிற்பவிச்
சகதண்ட மண்டல மடுக்கழியு நாளமரர்
    தமையழக் காண்பவனிவன்
நின்னைப் பொருட்படுத் தொருவிரற் றலைசுட்டி
    நீள்கழற் றாளுதைந்து
நெடுமலர்க் கண்பிசைந் தழுதழு தழைத்தனன்
    நினக்கிதில் வியப்பிலைகாண்
பின்னற் றிரைச்சுர நதித்தண் துறைத்தேவர்
    பேதைக் குழாங்களென்னப்
பெருகுந் தடம்புன்ற் காவிரிப் பூவிரி
    பெருந்தண் டுறைச்சிறைவிரித்
தன்னக் குழாந்திளைத் தாடுசோ ணாடனுடன்
    அம்புலீ யாடவாவே
அழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன்
    அம்புலி யாடவாவே.    
(10)

    419. (அடி, 1) தெய்வச்சிறார் - விநாயகர் முதலியோர். இளவீரர் - நவவீரர்கள். சகதண்டமண்டலம் - பூமியும் அண்ட கோளங்களும். அடுக்கழியும் நாள் - தம் நிலையழியும் சர்வ சங்கார காலத்தில். அமரர்தாமும் அக்காலத்து அழிவராதலின் அவர் அழுதனர்.

    (2)பொருட்படுத்து - ஒரு பொருளாகக் கருதி.

    (3-4) ஆகாய கங்கையில் தெய்வமகளிர் விளையாடுவதைப் போலக் காவிரி நதியில் அன்னங்கள் ஆடின.

    சுரநதி - ஆகாய கங்கை. தேவர் பேதைக் குழாங்கள் - தெய்வ மகளிர் கூட்டங்கள்.