8.சிற்றிற் பருவம்
420. | குறுமென் னடையு நெடுவெணிலாக் | | கோட்டு நகையும் வாட்டடங்கண் | | குளிர முகந்துண் டொளிர்சுட்டிக் | | குஞ்சி திருத்தி நறுங்குதலை | | முறுகு நறைத்தேன் கனிபவள | | முத்துண் டுச்சி மோந்துகொண்டுன் | | முகமுந் துடைத்து விளையாட | | முன்றிற் புறத்துப் பொன்றதும்பி | | இறுகும் புளகக் கும்பமுலை | | என்றி ராட்டி விடுத்ததுமற் | | றிளையார் மறுக மறுகுதொறும் | | இடுக்கண் செயற்கோ வெந்தாய்நின் | | சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற் | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. | |
421. | கொழுநாண் மலர்க்கற் பகமுநறைக் | | குரவு நாறு நறுங்குஞ்சிக் | | கோமான் மகனே நங்கள்குலக | | கொழுந்தே யென்று குறையிரந்து | | தொழுவா னவர்த முடிசூட்டும் | | சோதி முடியிற் றுகளெழநின் |
420. இச்செய்யுளின் முற்பகுதியில் உமாதேவியார் முருகக் கடவுளுக்கு அணியணிந்து விளையாட விட்ட செய்தி கூறப்படும்.
(அடி, 2) முறுகு நறைத் தேன் - முதிர்ந்த மணமுள்ள தேன். பவள முத்துண்டு - திருவாயின் முத்தங் கொண்டு.
(3) எம்பிராட்டி - உமா தேவியார், மறுக - வருந்த. மறுகு தொறும் - வீதிதோறும். இடுக்கண் செயற்கோ விடுத்தது?
421. (அடி, 1) குஞ்சி - முருகக் கடவுளது தலைமயிர். குஞ்சியையுடைய மகன். கோமான் - சிவபெருமான்.
(2) முடி சூட்டும் சோதி முடி - தலையின்கண் அணியும் சோதியையுடைய கிரீடம். வண்டல் துறை - மகளிர் விளையாடும் இடம். முருகக்
|