| துணைத்தாள் வண்டற் றுறைப்புழுதித் | | தூளி படினும் படுகசுடர்க் | | கழுவா மணியு நிலவுவிரி | | கதிர்நித் திலமு முமையம்மை | | கண்ணி லுறுத்த வடிகேணின் | | காலி லுறுத்தல் கடனன்றாற் | | செழுநான் மறையின் பெருஞ்செல்வச் | | செருக்கே சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
422. | வழிக்குப் புறம்பா யாமிழைத்த | | வண்டன் மனையவ் வசுரேசன் | | வான்கூட் டுண்பா னடுக்கடலில் | | வகுத்த நகரன் றிகழாமே | | கொழிக்குஞ் சிறுமுற் றிலில்வாரிக் | | கொடுவந் தடியே மனைமுன்றிற் | | குவியா நின்ற மணிக்குவையக் | | குருகு பெயர்க்குன் றமுமன்றாற் | | சுழிக்குண் டகழி வாய்மடுப்பச் | | சுடர்வால் வளைத்தெண் டிரைக்கரத்தாற் | | சுரபி சொரிபான் மடையடைத்த | | சோற்றி னோடுங் கலந்தூட்டிச் |
கடவுள் திருவடியில் வண்டற்புழுதி படின், அப்புழுதி அவ்வடியின்கண் வீழ்ந்து வணங்கும் தேவர்கள் திருமுடியிற் படும்.
(3) மணியும் நித்திலமும் மகளிர் சிற்றிலில் உள்ளவை. அடிகேள் - சுவாமீ. முருகக் கடவுள் திருவடியில் மணியும் நித்திலமும் உறுத்துவதை உமாதேவியார் காணப்பொறாரென்பது கருத்து. ‘கண்ணிலுறுத்தல்’ என்பது காணப்பொறாமையைக் குறிக்கும் வழக்கு.
422. (அடி, 1) வழிக்குப் புறம்பாயென்றது ‘நீ நடப்பதற்கு இடையூறு செய்வதன்று’ என்னும் குறிப்புடையது. வண்டன் மனை - சிற்றில். அசுரேசன் - சூரபன்மன். வான் கூட்டுண்பான் - தேவலோகத்தைக் கொள்ளையடித்தற் பொருட்டு. நகர் - வீர மகேந்திரம்.
(2) முற்றில் - சுறுசுளகு. குருகுபெயர்க்குன்றம் - கிரவுஞ்சகிரி.
(3-4) காவிரியின் சிறப்புக் கூறப்படும். சுழிக்குண்டசுழி - சுழியையுடைய ஆழமாகிய கடல். வாய்மடுப்ப - உண்ண. வளைத்தெண்டிரைக்
|