| செழிக்குந் தடங்கா விரிநாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
423. | மூரிக் களிறோ மழவிடையோ | | முடுகிற் றெனப்பார்த் துழியுனது | | முகத்தி னழகெம் வடிக்கண்ணால் | | மொண்டுண் டனம்யா மெனவுமிகப் | | பாரித் தோங்கிப் பூரித்த | | பைம்பொற் புயத்தைக் கண்ணேறு | | பட்டே மெனவு மடிகள்பகை | | பாராட் டுவதோர் பண்பன்றால் | | வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை | | விரிபூங் கமுகும் பால்பாயும் | | வேழக் கரும்பு மிருட்பிழம்பை | | விழுங்கிக் கக்குஞ் சுடர்ப்பருதித் | | தேருக் கெழில்செய் சோணாடா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே | | செந்நெற் பழனப் புள்ளூரா | | சிறியேஞ் சிற்றில் சிதையேலே. |
கரத்தால் - சங்குகளை வீசும் அலையாகிய கையினால்; வளை - கைவளையென்பது மற்றொரு பொருள். சுரபி - காமதேனு. “சோழ வளநாடு சோறுடைத்து” என்று கூறுதலின் அச்சோற்று வளத்தை இங்கே புலப்படுத்தினார. காவிரி என்னும் பெண் தன் வளைக்கரத்தால் பாலுஞ் சோறுங் கலந்து கடல் உண்ணும்படி ஊட்டுமென்றது நயம்.
423. (அடி, 1) மூரி - வன்மை. வடிக்கண் - மாவடுவின் வகிர் போன்ற கண்; கூர்மையான கண்ணெலுமாம். முகத்தழகைக் கண்ணால் மொண்டு உண்ணுதல்: “இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணின் முகத்தழகு கருக நோக்கி” (கம்ப. மிதிலைக் 157). (பி-ம்.) ‘யாமென்றும்’.
(2) பாரித்து - பருத்து. கண்ணேறுபட்டேம் - திருஷ்டி தோஷம் உண்டாகச் செய்தோம். அடிகள் - ஸ்வாமீ; இங்கே ஒருமையின்கண் வந்தது.
(3) தாறு இளம் பாளை. வேழக்கரும்பு - இரசதாளிக் கரும்பு.
(3-4) தேருக்குக் கமுகும் கரும்பும் கட்டி அலங்காரம் செய்யும் மரபு கருதி இங்ஙனம் கூறினார்.
|