பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்319

மீனத் தடங்க ணவண் மிச்சில்
    மிசைந்திட் டதுவு நசைமிக்கு
விரைத்தீங் குமுதத் தமுதடிகள்
    விருந்தா டியதும் விண்டோமோ
கூனற் பிறையின் கோடுரிஞ்சும்
    கொடிமா டத்து வெயில்விரிக்கும்
குருமா மணியாற் சுரநதியிற்
    கொழுந்தா மரைகண் முறுக்குடைந்து
தேனக் கலருஞ் சோணாடா 
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.        
(6)

426.
பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும்
    பெருமா னார்க்கு முலகேழும்
பெற்ற தாய்க்கு நீயருமைப்
    பிள்ளை யெனினெம் பேராய
வெள்ள மமைத்த சிறுசோறு
    வேண்டி னிடுகே மலதெளியேம்
விளையா டிடத்துச் சிறுகுறும்பு
    விளைத்தாற் பொறுக்க விதியுண்டோ
கள்ளவிழிச்சூ ரரமகளிர்
    காமன் கொடியேற் றெனவியப்பக்
கற்ப தருவிற் படர்ந்தேறு
    காமர் கொடிச்செங் கயல்பாயும்

    (2) நசை - விருப்பம். குமுதத்து அமுது - வாய் நீர்.

    (3) கோடு - முனை. சுரநதி - ஆகாய கங்கை. மணியின் ஒளியை வெயிலென்று கருதித் தாமரை மலர்ந்தது.

    426. (அடி, 1) பிள்ளைமதி - பிறையை. தாய்; உமாதேவியார்.

    (1-2) ஆய வெள்ளம் - விளையாட்டு மகளிர் கூட்டம். விதி - நியாயம்.

    (3) காமன் கொடியேற்று - மன்மதன் திருவிழாவிற்குரிய துவசாரோகணம். காமர்கொடி - காமவல்லியில். கற்பக மரத்திற் படர்ந்தோறிய காமவல்லியின்கண் கயல்மீன் பாயுங்காலத்தில் காமனுக்குரிய துவசத்தம்பத்தில் மீனக்கொடியை யேற்றியது போலத் தோற்றியது.