பக்கம் எண் :

320குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தெள்ளு புனற்கா விரிநாடா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.        
(7)

427.
மடல்வா யவிழ்ந்த குழற்பேதை
    ஒருத்தி திருத்தும் பகிரண்ட
மணற்சிற் றிலையோர் கணத்தின்கண்
    மட்டித் தாடு மைந்தனருள்
விடலாய் தமியேஞ் சிற்றின்முற்றும்
    விளைாயாட் டாக வொருநீயும்
வீட்டா நிற்பத் தொடங்கினையால்
    வித்து முளையும் வேறன்றே
கடமா மருப்புஞ் சுடர்மணியும்
    கதிர்நித் திலமு மகளிர்முலைக்
களபத் தொடுகுங் குமச்சேறும்
    கரைத்து விடுத்தக் கடற்குட்டம்
திடராச் செயுங்கா விரிநாடா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.        
(8)

    427. (அடி, 1) பேதை யென்றது பெண்ணென்னும் செம்பொருளுடையதேனும் பகிரண்ட மணற்சிற்றிலென்ற உருவகத்திற்கியையப் பருவத்தையும் குறித்து நின்றது. பேதை - உமாதேவியார். பகிரண்டம் - வெளியேயுள்ள அண்டகோளம். மட்டித்து - தேய்த்து (34). மைந்தன் - வன்மையையுடைய சிவபெருமான்; இளைஞனென்பது வேறுபொருள்.

    (2) வீட்டா நிற்ப - அழிக்க. வித்தும் முளையும் வேறன்றே: “செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச், செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல், வயனிறையக் காய்க்கும் வளவய லூர, மகனறிவு தந்தையறிவு” (நாலடி. 367.)

    (3) கடமா - யானை. கடற்குட்டம் - பள்ளமான கடல்; “கடற்குட்டம் போழ்வர் கலவர்” (நான்மணிக். 18.)

    (4) திடர் - மேடு.