பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்321

428.
வாமாண் கலைப்பே ரகலல்குல்
    மடமா னோக்கி னரமகளிர்
மகிழ்பூத் திருப்பப் புத்தேட்கு
    வந்த விடுக்கண் மாற்றினையால்
கோமா னினக்கப் பெருந்தேவர்
    குலமே யன்றி யடியேமும்
குற்றே வலுக்கா மகம்படிமைக்
    குடியாக் கொண்டாற் குறையுண்டோ
காய்மாண் குலைச்செவ விளநீரைக்
    கடவுட் சாதி மடநல்லார்
கதிர்ப்பூண் முலையென் றேக்கறப்பைங்
    கமுகு நகைவாண் முத்தரும்பும்
தேமாம் பொழிற்றீம் புனனாடா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.        
(9)

429.
கருவீற் றிருந்த பெருங்கருணை
    கடைக்கண் பொழிய வீற்றிருக்கும்
கடவு ணீயே பகிரண்டம்
    கண்டா யெனின்வண் டடைகிடப்ப
மருவீற் றிருந்த குழன்மகளிர்
    வண்டற் றுறைக்கு மணற்சிற்றில்

    428. (அடி, 1) புத்தேட்கு - தேவர்களுக்கு; சாதியொருமை; இந்திரனுக்கு எனலும் ஆம்.

    (2) அகம்படிமைக்குடி - அணுக்கத் தொண்டுபுரியும் அடியர்; அகம்படிமைத் தொண்டுக்குப் பெண்பாலாரும் உரியர்.

    (3) காய் மாண் குலைச் செவ்விளநீர்: காய்மாண்ட தெங்கின் பழம்” (சீவக.) கடவுட்சாதி - தேவசாதியினர்; எழுவாய். ஏக்கற - ஏமாந்து நிற்ப. அது கண்டு கமுகு நகைப்பதுபோல முத்தரும்பியது. கமுகில் முத்துப் பிறப்பதாகக் கூறுதல் மரபு. இளநீரை நகிலென்று கருதுதல்; (334.)

    (4) தேமா - ஒருவகை மாமரம்.

    429. (அடி, 1) கரு - முதிர்வு. கருணையைக் கடைக்கண் பொழிய (24-8.) கண்டாய் - சிருட்டித்தாய்.

    (2) மரு - நறுமணம். வண்டல்துறை - விளையாட்டிடம். வகுக்குர் தொழிற்கு - சிருட்டிக்கும் தொழிற்கு. மாறு - விரோதம்.