433. | மொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற | | மோடாமை முதுகுளுக்க | | முடவுப் படங்கிழிந் தரவரசி னாயிர | | முடித்தலையு மூளைபொங்கக் | | கம்பக் கடாயானை யெட்டும் பிடர்த்தலை | | கழுத்தொடு முரிந்துகவிழக் | | கதிர்மணிச் சூட்டுநெட் டரவெட்டும் வடவைக் | | கடுங்கன்ற் கண்பிதுங்க | | அம்பொற் றடம்புரிசை யெழுபெருந் தட்டுருவி | | அண்டகூ டத்தளவலால் | | அவரவர் வழங்குதற் கிடுதலைக் கடையென | | அடுக்கேழு நிலையேழுமாம் | | செம்பொற் றிருக்கோ புரங்கள்பொலி வேளூர | | சிறுபறை முழக்கியருளே | | தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ | | |
434. | தரிக்குஞ் சுடர்ப்பருதி முழுமதிக் கடவுளொடு | | தடமதில் கடந்தநகர் |
433. இச்செய்யுளில் கோபுரத்தின் பெருமையும் உயர்ச்சியும் கூறப்படும்.
(அடி, 1) மொய்ம்பின் - வன்மையினால். மோட்டாமை - பெரிய ஆமை; ஆதி கூர்மம்; ஆதிசேடனுக்குக் கீழே இருந்து உலகைச் சுமப்பது. உளுக்க - பாரந்தாங்காமல் அசைப்ப. முடவுப்படம் - வளைந்த படம். அரவரசு - ஆதிசேடன்.
(2) கடாயானை - மதயானைகள். யானை எட்டும் பூமியைச் சுமப்பன. முரிந்து - வளைந்து. அரவெடு - அட்டமா நாகங்கள்; இவையும் பூமியைச் சுமப்பன. இவை கண்ணால் விடங்கக்கும் திட்டிவிடச் சாதிப்பாம்புகளாதலின், ‘வடவைக் கடுங்கன்ற்கண்’ என்றார்.
(3) புரிசை - மதில். எழுபெருந் தட்டு - ஏழுலகமாகிய தட்டுக்கள். மதில் ஏழுலகத்தையும் கடந்து மேலே சென்றமையின் நகருக்குள் புகுவதற்கு வழி இலதாயிற்று.
(3-4) தலைக்கடை - வாயில்; ஏழுலகத்தாரும் சென்று வருதற்கு ஏழு நிலைகள் அமைந்த கோபுரம். 434. சூரியனும் சந்திரனும் நகருக்குள் புக இயலாதவாறு மதில்கள் உயர்ந்துள்ளனவாதலினாலும், மாணிக்கம் இழைத்த மாடங்களும் முத்திழைத்த மாடங்களும் வெயிலையும் நிலவையும் ஒருங்கே வீசுவதாலும்
|