| சாரவரி தாற்புவன கோடிகட் கொளிசெயக் | | சதுமுகன் கற்பந்தொறும் | | விரிக்கின்ற விருசுடரு மொருவழித் தொக்கென | | வியன்கதிர்ப் படலமூடி | | வீங்கிருள் விழுங்குசெம் மணிமாட நிரையுமொளி | | விளைபசுங் கதிர்வெண்புரி | | புரிக்குச் செழுந்தரள மாடமும் வெயிலினொடு | | பொழிநிலாப் போர்ப்பமுற்றும் | | போதுதெரி யாமையிற் குமுதமொடு சதவிதழ்ப் | | போதுமே யிருபோதையும் | | தெரிக்குந் தடம்பணை யுடுத்ததமிழ் வேளூர | | சிறுபற் முழக்கியருளே | | தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ | | |
வேறு 435. | மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை | | மடமயி லினமகவ | | மால்கட லோலிடு மொலியென விரக | | மடந்தையர் மனநெகிழப் |
இரவும் பகலும் தெரியாமல் அவ்வூரினர் மயங்குவர்; ஆயினும் பகலில் மலரும் தாமரையும் இரவில் மலரும் குமுதமும் தாம் மலர்தலால் பொழுதைப் புலப்படுத்தின.
(அடி, 1) பருதி - சூரியன். அரிதால் - அரிது ஆதலால்.
(2) இருசுடரும் - சந்திரனும் சூரியனும். செம்மணி மாடம் நிரை - மாணிக்கங்கள் இழைத்த மாடங்களின் வரிசை. கதிர் வெண்புரி - வெண்கிரணங்களாகிய புரியை; புரி - கயிறு.
(3) தரளமாடம் - முத்துக்களால் ஆகிய மாடம். சதவிதழ்ப் போது - தாமரை. இருபோதையும் - இரவும் பகலுமாகிய இரண்டு பொழுதுகளையும்.
(3-4) குமுதம் தான் மலர்வதனால் இராக்காலத்தையும், தாமரை தான் மலர்வதனால் பகற்காலத்தையும் புலப்படுத்தின. தடம்பணை - பரந்த வயல்கள்.
435. முருகக் கடவுள் சிறுபறை முழக்க அதன் ஒலியினால் நிகழும் நிகழ்ச்சிகள் கூறப்படும்.
(அடி, 1) பிளிறும் - முழங்கும். சிறுபறை யொலியை மேக முழக்கமென எண்ணி மயில்கள் மகிழ்ந்து அகவின. விரக மடந்தையர் - தலைவரைப் பிரிந்த பிரிவுத் துன்பத்தையுடைய மகளிர்; விரகம் - பிரிவு.
|