பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்327

பழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு
    பண்ணவ ருண்மகிழப்
பரநா தத்தொலி யெனவனு பூதி
    பலித்தவர் நெக்குருக
அழலவிர் சோதியெ மைய னடஞ்செய
    ஆயிர மங்கையினோர்
அண்ண றுவைத்திடு குடமுழ வொடுசுடர்
    ஆழி யவன்கொட்டு
முழவென வமரரு முனிவரு மார்ப்ப
    முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
    முழக்குக சிறுபறையே.    
(6)

436.
பெருவெளி முகடு திறந்திட் டண்டப்
    பித்திகை வெடியாமே
பேரண் டத்துள வேதண் டங்கள்
    பிதிர்ந்துத்தி ராகாமே
குருமணி சிதறிய வென்ன வுடுத்திரள்
    கொட்டுண் டுதிராமே
குவடு படுந்திசை செவிடு படச்சிலர்
    குடர்கள் குழம்பாமே
திருவிர கொடுநக கண்களி னுஞ்செங்
    குருதி ததும்பாமே

    (2) ஆகுதி - யாகத்தில் தேவருக்கு அளிக்கப்படும் உணவு. வேட்டு - விரும்பி. பண்ணவர் - தேவர். அனுபூதி பலித்தவர் - ஞான அனுபவம் முற்றினவர்கள்.

    (3) என் ஐயன் - சிவபெருமான். ஆயிரம் அங்கையின் ஓர் அண்ணல் - வாணாசுரன். துவைத்திடு - முழக்கும். சுடராழியவன் - திருமால்.

    436. இன்னபடி சிறுபறை முழக்கவேண்டுமென்று வேண்டுகின்றார்.

    (அடி, 1) அண்டப்பித்திகை - அண்டச்சுவர். வெடியாமே - பேரொலியால் பிளவுபடாமல். பிதிர்ந்து - தூளாகி.

    (2) குருமணி சிதறிய என்ன - நிறமுள்ள மாணிக்கங்கள் சிதறிப் போயினவென்று சொல்லும்படி. கொட்டுண்டு - கொட்டிப் போய். சிலர் - மலையில் வாழ்வோர்.

    (3) விரலால் அடிக்கும்போது அடி வலிதாயின் நகக்கண்ணில் இரத்தம் குழம்புதல் இயல்பு.