பக்கம் எண் :

328குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சேயொளி நின்று துளும்பிட நின்சிறு
    செங்கை வருந்தாமே
முருகலர் தாரவ னொருமுறை மெல்ல
    முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்வரு திப்பதி முருகன்
    முழக்குக சிறுபறையே.    
(7)

437.
வம்மி னெனப்புல வோரை யழைத்திடு
   வண்கொடை முரசமென
வடகலை தென்கலை யொடுபயி லுங்கவி
   வாணர்க ளோடிவர
அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்றவ
   ணங்கை மணம்புணரும்
அணிகிளர் மணமுர சென்னவெ மையனொ
   டம்மை மனங்குளிரத்
தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்
   செங்கள வேள்விசெயும்
திறன்முர செனவிமை யவர்விழ வயரச்
   செழுநகர் வீதிதொறு
மும்முர சமுமதிர் காவிரி நாடன்
   முழக்குக சிறுபறையே
முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்
   முழக்குக சிறுபறையே.    
(8)

    (4) முருகு - நறுமணம்.

    437. வேளூரில், தியாகமுரசு, மணமுரசு, வெற்றிமுரசென்னும் மும்முரசும் அதிர்தலைக் கூறுகின்றார்.

    (அடி, 1) கொடைமுரசம் - தியாகமுரசம். என : எண்ணிடைச் சொல்.(2) பொன்னுலகின்ற அணங்கு - தெய்வயானை. (பி-ம்.) ‘அணிகிளர் மணிமுர சென்ன’. என் ஐயன் -சிவபெருமான். அம்மை - உமாதேவியார்.

    (3) தெவ் முனை சாய - பகைவர் போர்க்களத்தில் தோல்வியுற. செங்கள வேள்வி செயும் - இரத்தத்தாற் சிவந்த களத்தில் பகைவரை வென்று அவ்வெற்றியைக் கொண்டாடிக் களவேள்வி செய்யும்.

    (முடிபு.) கொடைமுரசம் முதலியனவெனச் மும்மரசமும் அதிர் காவிரி நாடன் என்க; முதலியனவெனச் சிறுபறை முழக்குக வென்பதும் பொருந்தும்.