சந்த விருத்தம் 438. | பெருகுசுவைத்தெளி நறவொழுகக்கனி கனியமுதே | | பிடிநடைகற்றிட வடிகள்பெயர்த்திடு மடவனமே | | கருவரைநெக்குட னுருகமிழற்றுமொர் கிளியரசே | | கருணைசெயத்தகு மளியனிடத்தெனு மொழிபுகலா | | அருளில்புனத்தவர் மகளிருபொற்பதம் வருடல்செயா | | அவண்முனெடுத்துநின் முடியின்முடித்திடு கரமலராற் | | பருவயிரப்பய சயிலன்முழக்குக சிறுபறையே | | பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே. |
439. | இழுமென்மொழித்தெளி தமிழின்வடித்திடு நவரசமே | | இதயவிருட்டற வுணர்விலுதித்திடு சுடரொளியே | | கழுவுமணிக்கல னடுவிலிழைத்திடு குலமணியே | | கனிதருமுக்கனி யொடுவடிகட்டிய சுவையமுதே | | ஒழுகுநறைச்செழு மலர்விரியக்கமழ் புதுமணமே | | உருகுமளத்தருள் பெருகியுவட்டெழு சலநிதியே | | பழமறைகட்கொரு முதல்வன்முழக்குக சிறுபறையே | | பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே. |
438. (சந்தக் குழிப்பு.) தனனதனத்தன தனனதனத்தன தனதனனா.
(அடி, 1-3) முருகக் கடவுள் வள்ளிநாயகியாரைப் பாராட்டுதல் கூறப்படும்.
(1) அடிகள் பெயர்த்திடும் - மெல்ல நடக்கின்ற.
(2) கருவரை நெக்கு உடன் உருக - கரிய மலை நெகிழ்ந்து ஒருங்கே உருகும்படி; மழலைச்சொல் இசைபோன்றிருத்தலின் அதற்குக் கல் உருகியது. மிழற்றும் - இனிய சொற்களைப் பேசும். அளியனிடத்துக் கருணை செயத்தகும்;தகும்: தேற்றவினை.
(3) அருளில் புனத்தவர் மகள் - இரக்கமில்லாத குறவருக்கு மகளாகிய வள்ளி நாயகியினது. எடுத்து - அப்பதத்தை எடுத்து.
439. (அடி, 1) நவரசம் - நகைச்சுவை முதலிய ஒன்பது சுவைகள். இதய இருட்டு - அஞ்ஞானம். உணர்வில் - ஞானத்தில்.
(1) கழுவு மணிக்கலன் - சாணையிட்ட இரத்தினங்களாலாகிய ஆபரணம். நடுவில் இழைத்திடு குலமணி - நடுநாயகமணி.
(3) சலநிதி - சமுத்திரம்.
|