444. | நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு |
| நிகளத் தடங்குன்றுவான் |
| நிமிருங் கதிர்க்குலைச் செந்நெலைப் பாகுபடு |
| நெட்டிலைக் கன்னல்கொலெனாக் |
| கைவைத் திடப்பரி முகஞ்செய்து வெய்யோன் |
| கடும்பரியை நட்புகொளும் |
| கழனிவிரி காவிரித் திருநாட கற்பகக் |
| காட்டிற் பிறந்துபிரியா |
| மெய்வைத்த காதன்மை யரமகளிர் பேராய |
| வெள்ளந் திளைத்தாடியோர் |
| மென்னடைக் கேக்கற்ற பிடிபின் பிடிக்கமுலை |
| வேழங்க ளுடனுலாவும் |
| தெய்வப் பிடிக்குக் கிடைத்தொரு மழகளிறு |
| சிறுதே ருருட்டியருளே |
| திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர |
| |
நெய் வைத்தவென்றது கூந்தலென்னும் பொதுமைபற்றிக் கூறியது. நாற்கோட்டு நிகளத் தடங்குன்று - ஐராவதம்; நிகளம் - கால்தளை. பாகுபடு கன்னல், நெட்டிலைக் கன்னலென்க; பாகு - வெல்லப்பாகு. ஈண்டுள்ள நெற்கதில் வானுலகளவும் வளர்தலின் அதன்பால் ஐராவதம் கை வைத்தது. அக்கதிர் வளைந்து குதிரை முகத்தைப் போன்ற தோற்றத்தை உண்டாக்கியது; “கதிர்ச்சாலி, சூடறுப் புண்ட வெனக்கழுத் தறுப்புண்ட துரகம்” (கம்ப. கரன்வதைப். 149.) 445. சோணாடு மன்மதனுக்குரிய படைவீடு முதலியவற்றை உடையதாயினும் மருதத்திணைக்குரிய இந்திரனால் ஆளப்படுவதென்பது கூறப்படும்.
(அடி, 1) காமன் கொடிப்படை - காமனது கொடியையுடைய படையாகிய மகளிர். பழனங்கள் - வயல்கள். காமனுக்குரிய அம்பாகிய தாமரை முதலியன வளர்தலின், அவை அத்திர சாலையாயின. கால்தேர் - தென்றற் காற்றாகிய தேர்.