பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்335

கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு
    கூடமே யெனினுமருதக்
கோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு
    குங்குமங் கொட்டுதிண்டோட்
பொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு
    பூங்குழற் காடும்வெயில்கால்
புனைமணிக் கலையல்குன் மாக்கடலு மேந்தியொர்
    புனத்தின்கண் மிகநுடங்கும்
சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன்
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(6)

446.
கோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங்
    குன்றுகவுண் மடைதிறந்து
கொட்டுநெட் டருவியொடு தேனருவி யுந்திரை
    கொழித்துடன் கோப்பமேதிப்
பால்பாய் பெருக்கா றுவட்டெழுத றன்றுணைப்
    பாவைய ரொடுங்குறுகுமப்
பாகீ ரதிக்குநிகர் தண்டுறை தொறுந்திசைப்
    பாலர்மேற் படையெடுத்து

    (2) கங்குலாகிய கடாயானை; சோலை, வெயில் நுழைதற்கியலாதபடி செறிந்து இருளுடையதாயிருத்தலின் அதனைக் கங்குற் கடாயானை கட்டுங் கூடமென்றார். மருதக் கோமகன் - மருதநிலக் கடவுளாகிய இந்திரன்; மருதத் திணையாகிய தெய்வமெனினும் ஆம். சேணாடு தோள்.

    (3) கொங்கைப் பொருப்பும் கூந்தற்காடும்: 701. புனம் - தினைக் கொல்லை.

    (4) கொடி - வள்ளி நாயகி.

    திண்டோளாகிய தடங்குன்றிற் (3) கொடிபடர நின்றவன் (4) என்க. குன்றிற் கொடி படரவென்றது ஒரு நயம்.

    446. (அடி, 1-2) யானையின் மதநீரும் தேனும் பாலும் கலந்து ஓடும் பெருக்குக்குக் கங்கை, யமுனை, சரசுவதியாகிய திருவேணி சங்கமம் உவமை.

    கும்பத் தடங்குன்று - யானை. நெட்டருவியென்றது மதநீர்ப் பெருக்கை. இது கரிய நிறமுடையதாதலின் கரிய நீரையுடைய யமுனையைப் போன்றது;” கருங்கட மூன்றுகு நால்வாய்க்கரிய” (திருச்சிற். 55.) தேரமுவி செந்நிறமுடைமையின் சோணைந்தியை ஒத்தது. மேதிப்பால் - எருமையின்பால். உவட்டெழுதல் - பெருகுதல். பால் ஆறு கங்கையை ஒத்தது. தன் துணைப்பாவையர் - யமுனையும் சோணையும்; தன்னென்றது கங்காநதியை. (பி-ம்.) ‘தொறுந்துக்குப்’.