பக்கம் எண் :

336குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வேல்பாய் நெடுங்கட் கடற்றானை யொடுமொருவன்
    மேற்செல்ல நாற்றிசையிலும்
வெற்றிக் கயற்கொடி யெடுத்தென வெடுத்தெறியும்
    வெண்டிரை கிழித்துவெடிபோம்
சேல்பாய் தடம்பணை யுடுத்தகா விரிநாட
    சிறுதே ருருட்டியருளே
திருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
    சிறுதே ருருட்டியருளே.    
(7)

447.
மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு
   மீனியரியல் போகவுகளும்
வெடிவாளை மதியக டுடைத்தூற்று தெள்ளமுத
   வெள்ளருவி யாற்பசுந்தண்
காத்தந்த சண்பகப் பூவேரி மாரிசெய்
   காவேரி யாயிரமுகக்
கங்கையா கச்செய்து மீட்டுநாற் கோட்டுவெங்
   களிறுபிளி றத்தாவிவான்
பூத்தந்த கற்பகக் காட்டினை யுழக்கிவிரி
   பொற்றா தெழுப்பிமற்றப்
பூந்துகட் படலத்தி னாறைறெய்வ நதியையும்
   பொன்னிந்தி யாகச்செய்யும்
தேதந்த தண்பணையு டுத்ததீம் புன்னாட
   சிறுதே ருருட்டியருளே
திருவிளர வளர்கந்த புரிவள ரிளங்குமர
   சிறுதே ருருட்டியருளே.    
(8)

    (3) நெடுங்கட் கடற்றானை - நெடிய கண்ணையுடைய மகளிராலாகிய கடல்போன்ற படை. ஒருவன் - காமன். வெடிபோம் - துள்ளும். சேல் மீன் மன்மதனது கயற்கொடிக்கு உவமை.

    447. வாளைமீனின் செயல் கூறப்படும்.

    (அடி, 1) மீத்தந்த மாகத்து - மேலேயுள்ள வானத்தில் இருக்கும். இரியல்போக - கெட்டு நீங்க. வாளை: எழுவாய்.

    (1-2) மதியிலிருந்து வீழும் அமுத தாரையால் காவிரிநீர் வெண்ணிறர் பெற்றுக் கங்கைபோலாயிற்று. காத்தந்த சண்பகப்பூ வேரி மாரி செய் - சோலையினால் தரப்பெற்ற சண்பகப்பூவின் தேன் மழைபோலச் சொரியப்பெற்ற. ஆயிரமுகக் கங்கை: கங்கைக்கு ஆயிரமுகம் இருப்பதாகக் கூறுதல் மரபு; “கங்கை, துறைகொ ளாயிர முகமுஞ் சுழல” (கல்லாடம்); “ஆயிர முகத்துந்தி பாலனும்” (வேளைக்காரன் வகுப்பு.)