பக்கம் எண் :

34குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மடலவிழ் துளபந றாவெடுத் தூற்றிட
   மழகளி றெனவெழு கார்முகச் சூற்புயல்
வரவரு மிளையகு மாரியைக் கோட்டெயில்
   மதுரையில் வளர்கவு மாரியைக் காக்கவே.        
(10)


வேறு
13.
அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொர
   அபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்
அளவு மெம்முடைய திறையி தென்னமுடி
   அரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும்
அகில மன்னரவர் திசையின் மன்னரிவர்
   அமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும்
அமுத வெண்மதியின் மரபை யுன்னியுனி
   அலரி யண்ணன்முழு வெப்பத்து மூழ்கவும்

    (3-4) பாடிடக் கேட்டு உடைகின்ற மடலவிழ்கின்ற துளபம்; வண்டு இசைபாடப் போது மலருமென்பது இங்கே அறிதற்குரியது. கார்முகம் - வில். சூற்புயல் - திருமால். வர வரும் - அவர் முன் வரத் தான் பின்னே தோற்றிய; அம்பிகையைத் திருமாலுக்குத் தங்கையென்றல் மரபு (22-3.) கோட்டு எயில் - சிகரங்களையுடைய மதில்.

    13. (சந்தக் குழிப்பு.) தனன தன்னதன தனன தன்னதன தனன தன்னதன தத்தத்த தானன.

    (அடி, 1) வெந் இடும் - புறங்காட்டும். அஉதியர் - அந்தச் சேரர்; அ.: உலகறி சுட்டு. அபயர் - சோழர். தோற்றவர் காட்டில் ஓடி ஒளித்தல் மரபு; வனம் - காடு. அளவும் - அளக்கும் திறை - கப்பம். அரசர் முற்றத்து வாடுதல்: “பல்வேறு வகையிற் பணிந்த மன்னர் ................தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச், செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்து” (பெரும்பாண். 428-35); “வேந்தர் வைகு முற்றத்தான்” (கம்ப. குகப். 65.) அகில மன்னர் - பூமியில் உள்ள பல்வேறு தேசத்து அரசர். திசையின் மன்னர் - திக்குப் பாலகர். அலரியண்ணல் - சூரியன். வெப்பமென்றது அழுக்காற்றைக் குறித்தது. தன்னினும் ஒளியால் தாழ்வு பட்ட மதியின்மரபு அம்பிகையின் அவதாரத்தால் இத்தகைய சிறப்படைதல் பற்றிச் சூரியன் மனம் புழுங்கினான்; பாண்டியரது மரபு மதிமரமென்பது நினைத்தற்குரியது.