பக்கம் எண் :

340குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தானே வகுத்ததுன் றமருகக் கரமே
5
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே
தோற்றுப் நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே
ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்
10
றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே
அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்
கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே
இத்தொழி லைந்துநின் மெத்தொழி லாகப்
பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென

உயிர்த்தொகுதிகளும்.தானே - பிறருதவியின்றித் தானாகவே. வகுத்தது - சிருட்டி செய்தது. தமருகக்கரம் - உடுக்கையைத் தாங்கிய திருக்கரம். உயிரென்றது இங்கே ஆகுபெயரால் அதற்கிடமாகிய உடம்பைக் குறித்தது, படைக்கப் படுவது உடம்பேயாதலின்; “உயிர்முன் புடைப்ப” (சிலப். 15: 86) என்பதனையும் அதற்கு அரும்பதவுரைக்காரர், ‘உயிரென்றது ஆகுபெயரான் உடம்பை’ என்றெழுதிய உரையையும் காண்க.

    (5-6) அமைத்த பொற்கரம் - அபயத்திருக்கை. (பி-ம்.) ‘அமைத்தகைத் தலமே.

    (7-8) அடங்கலும் - முற்றும். மாற்றுவது - சங்காரம் செய்வது. அழல் வைத்ததோர் கரம் - அக்கினியை ஏந்திழ திருக்கரம். (பி-ம்.) ‘அழலமைத்ததோர் கரமே’.

    (9-10) இவ்வடிகளில் திரோபவம் (மறைப்பு) கூறப்படும். ஊட்டுவது - நுகரச்செய்வது.

    (11-22) குஞ்சித பதம் - வளைந்த திருவடி; என்றது தூக்கிய பாதத்தை. அத்திருவடி அநுக்கிரகத் தொழில் புரிவது.

    (1-13) நடராசப் பெருமான் தம் திருநடனக் கோலத்தில் ஐந்தொழில் கூறப்பட்டது; “தோற்றந்துடியதனிற் றோன்றுந் திதியமைப்பிற், சாற்றியிடு மங்கியிலே சங்காரம் ஊற்றமாய், ஊன்று மலர்ப் பதத்தே வுற்ற திரோதமுத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்மை விளக்கம், 35.)

    (14-21) குழந்தையின் குடர் மருந்தைச் சீரணிக்கும் சக்தி யற்றதென்று தான் உண்டு அதன் பயனைப் பாலின்வழியே அக் குழந்தை பெறும்படி செய்யும் தாயைப் போல, அம்பிகை நடராசமூர்த்தியின் திரு நடனத்தைத் தான் தரிசித்து அதன் பயனை உயிர்கள் நுகரவைப்பவள்.