15 | நோயுண் மருந்து தாயுண் டாங்கு | | மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப | | வையமீன் றளித்த தெய்வக் கற்பின் | | அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட் | | டிருமாண் சாயற் றிருந்திழை காணச் | 20 | சிற்சபை பொலியத் திருநடம் புரியும் | | அற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த | | நல்லற நூல்களிற் சொல்லறம் பலசில | | இல்லறந் துறவற மெனச்சிறந் தனவே | | அந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற் | 25 | கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன் | | நற்குண நிறைந்த கற்புடை மனைவியோ | | டன்பு மருளுந் தாங்கி யின்சொலின் | | விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி | | ஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை | 30 | நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப் | | பிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு | | வரையா நாளின் மகப்பேறு குறித்துப் | | பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே |
பசுங்குடர் - இளங்குடல். நோயுண் மருந்து - நோயை அழிக்கும் மருந்தை. அருள் சூற்கொண்ட கண்: 24-8. சாயல் - மென்மை. திருந்திழை - சிவகாமவல்லி. அற்புதக் கூத்த - ஞானநடனம் புரிவோய்.
குழந்தையின் பொருட்டுத் தாய் மருந்து உட்கொள்ளல்: “நீற்றினை யணிந்ததுவெ னின்னிறைவ னென்றே, சாற்றினை யுயிர்க்கிடர் தணிப்பதென வெண்ணாய்,. தோற்றியுள தம்புதல்வர் துன்பமுறு மந்நோய், மாற்றும்வகை யன்னைய ரருந்திய மருந்தாம்” (திருவாதவூரர், புத்தரை வாதில் வென்ற, 76); “இளங்குழவிப் பிணிக்கீன்ற தாய்மருந்து நுகர்வதுபோ லிருளின் மாண்ட, களங்குலவு மலமுயிர்கட் கொழியவரு ண்டங் காணுங் கடன்மீக் கொண்டு, வளங்குலவு தனது பெருங் கற்புமொரு கணவரிறை மாண்புந் தோன்ற, விங்குமிர ணியமன்றி னின்றருளு மணிவிளக்கை விளம்பி வாழ்வாம்” (திருவானைக்காப். கடவுள். 7); ‘புதல்வனது பிணிக்குத் தாய் மருந்துண்டாற் போலத் தொழுதெழுவார் வினைக்குத் தான் நீறணிந்தா னென்பாரு முளர்’ (திருச்சிற். 118, பேர்.) (22) சில - இரண்டு (105.)
(24-33) இல்லறத்தின் இலக்கணம்.
முன்னது - இல்லறர். அன்பு தொடர்புடையாரிடத்துச் செல்வது. அருள் யாவர்மாட்டுஞ் செல்வது. இவ்விரண்டும் இல்லறத்தாருக்குரிய
|