பக்கம் எண் :

344குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

ஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது
செயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று
காசியி லிறத்த னோக்கித் தேசம்விட்
60
டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்
பிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு
கழிபெருங் கான நீங்கி வழியிடைத்
தீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்
பல்பிணிக்குடைந்து செல்லுங் காலத்
65
திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்
கிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ
டுடல்விடு காறுமத் தடநகர் வைகி
முடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனாற்
சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்
70
உற்றநின் றுருக்கூத் தொருகா னோக்கிப்
பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்
பெற்றன னளியனேன் பற்றில னாயினும்
அன்பிலை கொடியையென் றருளா யல்லை
நின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே
75
மருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்
அருந்துழி யொருவ னருவருப் புறீஇத்
தன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்
கண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்
வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்
80
தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி

    (57-8) ஆரூரிற் பிறத்தலின் அருமையை உணர்த்துகின்றார். நேர்படினல்லது - நல்லூழினால் இயல்பாகவே அமைந்தாலன்றி.

    (59-68) காசியில் இறத்தலின் அருமையைக் கூறுகின்றார். அறந்தலைத் தந்த - அறம் தந்த. தலை: அசைநிலை. நோய்ப் பனிக்கு - துன்பத்தைத் தரும் குளிருக்கு. கிடைத்தனன் ஆயின் - ஒருவன் அணுகினனாயின். அத்தடநகர் - காசியில். வைகி முடிவது - தங்கி இறத்தல். கடைபோக - முற்றும்வண்ணம்.

    (69-72) தில்லையில் தரிசனம் செய்த மாத்திரத்தில் முத்தியென்பது பண்டை நூற்றுணிபு.

    (70-71) ஒருகால் நோக்கியமாத்திரத்தே பரகதியடைதல் கூடுமென்னுங் கருத்தைப் பின்னுங் கூறுவர் (479).

    (73) அன்பிலை கொடியை: (தொல். கற்பு. 17).

    (75-80) வேட்கையனாகி உண்ணினும். இருவருக்கும் - விருப்போடு உண்டவனுக்கும் அருவருப்போடு உண்டவனுக்கும். திண்ணம் - உறுதி.