| நொதுமலும் பகையும் போக்கி யொருபொருள் | | விழுத்தகு கேண்மையோர்க் குதவல் | | வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே. |
நேரிசை வெண்பா 452. | மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள் | | துன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும் | | நற்புண்ட ரீகமே யொக்கு நடராசன் | | |
கட்டளைக் கலித்துறை 453. | புரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப்புவனமுண்ணும் | | சரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய் | | வரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம் | | பரமொன்று மென்றுகொல் லோகொண்டவாவப்பதஞ் சலியே. |
(81-3) நொதுமல் - அயல். வழக்கு - ஆன்றோர் மரபு. மன்றுடையோரென்றது ஆறங்கூறவையமுடையோரென்றும் நடனசபையை உடையோரென்றுத் இருபொருள்பட நின்றது.
(69-83) ‘அடியேன் நின் திருக்கூத்தை ஒருகால் கும்பிட்ட மாத்திரத்தால்பரகதி பெறும் உரிமையுடையேனானேன். அறிந்தும் அறியாமலும் உண்பவர் இருவருக்கும் மருந்து பயனைத் தருவதுபோலக், கூத்தின் தரிசனம் அடியேன் குறையுடையேனாயினும் எனக்கு நன்மையைத் தருதல் வேண்டும்; அன்றியும்
452. சிதம்பரத்திற்குத் தாமரை உவமிக்கப்படும்.
மன்றம் - பொன்னம்பலம். பொகுட்டு - உட்கொட்டை. மாடங்களில் பொருந்தும் மேகங்கள் வண்டாக (548). பொன் - திருமகள். புண்டரீகபுரம்: சிதம்பரத்தின் திருநாமங்களுள் ஒன்று. பொன்னம்பலத்தைத் தாமரையோடு உவமிப்பர் (494).
453. புரம் ஒன்று இரண்டும் - மூன்று புரங்களையும்; ஒன்றும் இரண்டுமென்று உம்மையை முன்னுங் கூட்டுக. புவனமுண்ணும் சரம் - திருமால். சலிக்க - நடுங்க. இரண்டு மலர்த்தாளும் ஊன்றின் - நிற்கும் திருக்கோலத்தோடு இரண்டு திருவடிகளையும் சிவபெருமான் ஊன்றினால். பதஞ்சலி முனிவர் ஆதிசேடனாதலின், இரண்டுதாளும் ஊன்றுதலினால் பாரம் பூமியில் உறைத்துப் பூமியைச் சுமக்கும் தமக்குத் துன்பஞ்செய்யுமென்று கருதியோ ஒரு காலைமட்டும் ஊன்றும் நடன தரிசனத்தை அம்முனிவர் விரும்பினார்? பரம் - பாரம். கொண்டவா - கொண்டவாறு. பதஞ்சலி வரமொன்று கொண்டவாறு பரம் ஒன்றும் என்றோ?
|