பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை347

முடபுறம் பொதிந்த நெட்டிலைக் கைதை
சுரிமுகப் பணோலமொடு சூலுளைந் துமிழ்ந்த
தரளம் வெண்மடற் றாங்குவ தம்ம
கருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி
15
இருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய
செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்
வருகவென் றழைத்துப்பெருநயப் பெய்திக்
கண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ
உண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென
20
உடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை
மடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்
நெய்தலொடு தழீஇய மருத வேலித்
தெய்வப் புலியூர் வைதிகக் கூத்த
பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்
25
மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி
இருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை
நிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்

    (11-12) தாழையின் வருணனை.

    (11-3) கைதை - தாழை. சுரிமுப்பணிலம் - சுழிந்த முகத்தையுடைய சங்கு. சூல் உளைந்து உமிழ்ந்த - அச் சங்கு கருப்பம் முதிர்ந்து ஈன்ற. சங்கையும் முத்தையும் ஒருங்கே தாங்குதல்.

    (14-6) வெண்பொடி - தாழம்பூவிலுள்ள தாது; திருநீறென்பது வேறு பொருள். யாம் பெறுதற்கரிய செஞ்சடையென்றது தாழை மலரின் உட்கோள்; என்றது சிவபிரான் அம்மலரை அணியாமையைக் குறித்தது. வெண்மதிக் கடவுள்: விளி.

    (17-8) நயப்பு - விருப்பம். கண்ணீர் வார - தேனாகிய நீர் ஒழுக; கண்ணிலிருந்து அன்பினால் நீர்பெருகவென்பது வேறொரு பொருள்; கண்ணீர்: சிலேடை.

    (19) வெண்சோறென்றது தாழம்பூவிலுள்ள ஒருவகைப் பொருளை; வழக்கு; ‘வெள்ளிய அன்னமென்பது வேறு பொருள்; “கூன் கைதை, சோறு கால்வன” (திருவிளை. நாட்டுப் 41.)

    (19-20) (பி-ம்.) ‘தண்ணெ, னுடுக்கணத்தொடும்.’

    உடுக்கணம் நட்சத்திரக் கூட்டம். உடுபதிக் கடவுளை - சந்திரனாகிய தெய்வத்தை.

    (12-21) சங்குக்குச் சந்திரனும் முத்துக்களுக்கு நட்சத்திரங்களும் உவமைகள்.

    (24-7) மேருவைச் சேர்ந்த பொன்னிறமுள்ள புறவும் கருநிறக் காக்கையும்பொன்னிறத்தையே அடையும்;