| பண்ணுலாம் வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும் | | பணைத்தோ ளெருத்தமேறிப் | | பாசொளிய மரகதத்் திருமேனிப் பச்சைப் | | பசுங்கதிர் ததும்பமணிவாய்த் |
| தெண்ணிலா விரியநின் றாடும் பசுந்தோகை | | செங்கீரை யாடியருளே | | தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி | | |
16. | சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய வெட்டுச் | | சுவர்க்கா னிறுத்திமேருத் | | தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு | | சுடர்விளக் கிட்டுமுற்ற |
| எற்றுபுன லிற்கழுவு புவனப் பழங்கலம் | | எடுத்தடுக் கிப்புதுக்கூழ் | | இன்னமுத முஞ்சமைத் தன்னைநீ பன்முறை | | இழைத்திட வழித்தழித்தோர் |
| முற்றவெளி யிற்றிரியு மத்தப் பெரும்பித்தன் | | முன்னின்று தொந்தமிடவும் | | முனியாது வைகலு மெடுத்தடுக் கிப்பெரிய | | மூதண்ட கூடமூடும் |
(3) தமிழ்ப்பைந்தாமம் - தமிழ்ப்பாமாலை. தோள் எருத்தம் - தோளைச் சார்ந்த பிடரி. மரகத்த் திருமேனி, அம்பிகையினது. மணி - பவளம்.
(4) தோகை: விளி.
16. (அடி, 1) நேமிச்சுவர் - சக்கரவாளகிரியாகிய சுவர். எட்டுச் சுவர்க்கால் - குலாசலங்கள் எட்டு; “வெற்பெட்டும்” (34.) சுவரைச் சார்த்தியமைத்த கால்களின்மேல் மேற்பரப்பின் பாரம் தங்கும்படி அமைத்தலும் இடையிலே ஒரு தூண் நடுதலும் ஒருவகைச் சிற்பம். வெளிமுகடு - ஆகாயத்தின் உச்சி. இரு சுடர் - சூரிய சந்திரர். முற்ற - முழுவதும்.
(2) புனல் - கடல். புனலிற் கழுவுதலென்றது பிரளயகால வெள்ளத்தில் உலகு அமிழ்தலைக் குறித்தது. புதுக்கூழ் - புதுக்கிய ஊழ், புதிய கூழ்; சிலேடை (71.) இழைத்திட - செய்ய.
(3) வெளியில் முற்ற - வெளியில் முழுதும். தொந்தமிடல் - கூத்தாடல் (30.) வைகலும் - நாள்தோறும். முதிய அண்ட கடாகத்தால் மூடும்.
|