பக்கம் எண் :

சிதம்பர மும்மணிக்கோவை369

தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற
இழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து
மற்றது பெறுதற் குற்றன தெரீஇ
10
அயிற்சுவை பெறாயன் றுயிற்சுவை யுறாஅன்
மாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்
சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து
கவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்
தூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு
15
புற்கையு மடகு மாந்தி மக்களொடு
மனையும் பிறவு நோக்கி யயன்மனை
முயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி
எனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்
மனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்
20
செல்வ மென்பது சிந்தையி னிறைவே

    (8) இழபறு விழுமம் - ஒரு பொருளை இழத்தலைப் போன்ற துன்பம்; உறு: உவமவுருபு. அழுக்கறுத்து - பொறாமையுற்று.

    (9) மற்று: அசைநிலை. அது - அம் மிகுதியான பொருளை. உற்றன தெரீஇ - உரியவாக உற்ற உபாயங்களை ஆராய்ந்து.

    (10) அயிற்சுவை, துயிற்சுவை: 291.

    (12) சிறுகாற்று வழங்கா - முதலிய சிறு மூச்சு விட்டு.

    (பி-ம்.) ‘சிறுகாற்று வழங்கப்’.

    (5-13) “பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும், சிற்றுயிர்க் காக்க மரிதம்மா” (269) என்று முன்னர்க் கூறியது காண்க; “ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்காட்டி யளினுங் கடன் மீதிலே - ஆணைசெலவே நினைவ ரளகேச னிகராக வம்பொன்மிக வைத்தபேரும், நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” (தாயு, பரிபூரணானந்தம். 10.)

    (13-9) (பி-ம்.) ‘காண்டு மதாஅன்று’. வறியவனாயினும் சிந்தை நிறைவுடையோன் இன்பம் பெறுதல் கூறப்படும்.

    (15) புற்கை - புல்லரிசிக்கூழ். அடகு - இலை.

    (16) மனை - மனைவி. அயல் மனை - அடுத்த வீட்டிலுள்ள.

    (17) முயற்சி இல் மகனை - முயற்சி இல்லாத மனிதனை.

    (20) சிந்தையின் நிறைவு - திருப்தி.