| வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின் | | அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற் | 35 | பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த | | அல்லல் செய்யு மவாவென படுமவ் | | வறுமையி னின்றும் வாங்கி | | அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. |
நேரிசை வெண்பா 476. | என்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல் | | முன்செய் தெயிளை முடியாமற் - கொன்செய்த | | பொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர் | | |
கட்டளைக் கலித்துறை 477. | வள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக் | | கள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை | | வெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன் | | உள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே. |
(35-6) பவக்கடல் - பிறவியாகிய கடல்; இவ்விரண்டடிகளின் கருத்து, “அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்னும் குறளைப் பின்பற்றியது.
(36-7) அவா வெனப்படு மவ் வறுமை: 21-ஆம் அடியைப் பார்க்க.
(37) “நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை, பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்” (நாலடி. 251); “அறிவுடையாரெல்லா முடையார்” (குறள், 430) என்பராதலின் அறிவினைச் செல்வமாக்க் கூறினார்.
476. எயிலை - திரிபுரங்களை, முடியாமல் - அழிக்காமல். பொன் புயங்கம் - பொலிவு பெற்ற பாம்பை. நாணேற்றி வில்லை வளைத்துப் பின்பு அம்பு எய்யாமல் நகைத்துப் புரமெரித்த நீர் வில்லைவளையாமலே அதனைச் செய்திருக்கலாமே என்பது கருத்து. தேவர்களின் செருக்கைக் கண்டு சிவபெருமான் வில்லை வளைத்தும் அம்பெய்யாமல் சிரிப்பினால் எரித்தாரென்பது வரலாறு; “சொல்லுக் கினிய கழுக்குன்ற ரேயுமைச் சொல்ல வென்றால், அல்லற் பிழைப்புப் பிழைத்துவிட் டீர்முப்பு ராதியர்மேல், வில்லைக் குனித்தெய்ய மாட்டாம னீரந்த வேளிதனிற், பல்லைத் திறந்து விட்டீரிது வோநும் படைத்தொழிலே”(தனிப்.) என்னும் செய்யுள் இங்கே நினைவுக்கு வருகிறது.
477. வள்ளக்கலசமுலை: (633.) நயனமாகிய கள்ளச் சுரும்பர்; சுரும்பர் - வண்டு. களிகளகின்றவா - மகிழ்வது என்ன வியப்பு? மேல் இட்டு - மேலே தாங்கி. வெண்தாது - திருநீறு. விராட்புருடன் உள்ளக்
|