| அங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும் | | செங்கா லன்னந் திருமக ளாகப் | | பைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன | | அந்தண் பூந்தட மளப்பிற சூழ்ந்து | 15 | பல்வளம் பயின்ற தில்லையம் பதியிற் | | பொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற | | நன்னடம் புரியு ஞானக் கூத்த | | ஒருபெரும் புலவனோ டூட றீரப் | | பரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள் | 20 | ஏதமென் றுன்னா திருகா லொருகாற் | | றூதிற் சென்றநின் றுணையடிக் கமலத் | | தீதொன் றியம்புவல் கேண்மதி பெரும | | அலையா மரபி னாணவக் கொடியெனும் | | பலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ | 25 | ஏகலன் றணந்தாங் கென்னையு முணராது | | மோகமொ டழுந்தி முயங்குறு மமையத் | | தங்கவட் குரிய தங்கைய ரிருவருட் | | குடிலை யென்னு மடவர லொருத்தி | | எய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள் |
(18-19) ஒரு பெரும் புலவன் - சுந்தரமூர்த்தி நாயனார் (பி-ம்.) ‘தீர்ப்பப்’. பரவை - பரவையார்.
(20) இருகால் - இரண்டுமுறை. ஒருகால் - ஒரு காலத்தில் “நள்ளிருள் யாமத்து நாவலர் பெருமான், தள்ளாக் காதலறிணித்தற் கம்ம, பரவை வாய்தலிற் பதமலர் சேப்ப, ஒருகா லல்ல விருகா னடந்தும்” “பரவைதன் மனைவயிற் பாவல னேவலின், இருமுறை திரிதலின்” (344, 518); “இருகாலுஞ் சந்துபோனால்” (தனிப்.)
(23-4) ஆணவத்தைச் சேரிக்கரத்தையாக உருவகம் செய்தார்; சேரிப்பரத்தை பொதுமகளாதலின், ‘பலர்புகழ் சேரிப்பரத்தை’ என்றார்.
(25) தணந்து ஏகலன் - பிரிந்து போகேனாகி.
(28) குடிலை - சுத்தமாயை.
(29) ஐவரென்றது சுத்தமாயையிற்றோன்றிய சிவத்ததுவமாகிய சுத்தவித்தை, ஈசுவரன், சதாக்கியம், சத்தி, சிவமென்னும் ஐந்தனையும் (பி-ம்.) ‘இருவரைப் பெற்றனள்’.
|