30 | மோகினி யென்பவண் மூவரைப் பயந்தனள் | | ஆகிய புதல்விய ரங்கவர் மூவருட் | | கலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி | | தானு மூவரைத் தந்தன ளவருள் | | மானெனப் பட்ட மடவர லொருத்தி | 35 | எண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம் | | நண்ணிய மடந்தைய ரையெழு வரையும் | | கிளப்பருங் காமக் கிழத்திய ராக | | அளப்பில் கால மணைந்தனன் முயங்குழி | | முறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென | 40 | அறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ | | நின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை | | ஞான வல்லியை நன்மணம் புணர்த்தி | | ஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி | | இறவா வீட்டினி லிருத்திக் | 45 | குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே. |
(30) மோகினி - அசுத்தமாயை. மூவரென்றது காலம், நியதி, கலையென்பவற்றை.
(32-3) கலை தந்த மூவரென்றது, வித்தை, அராகம், மான் என்பவற்றை.
(34) மான் - மூலப்பிரகிருதி.
(35) எண் மூன்று திறத்தார் - ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, பூதங்கள் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய இருபத்துநான்கு.
(36) ஐயெழுவர் - மேலே கூறிய குடிலை வழிவந்த ஐவரும் மோகினி வழிவந்த மூவரும், கலைவழிவந்த மூவரும், மான்வழி வந்து இருபத்து நால்வரும்.
(37) காமக்கிழத்தியர் - ‘கடனறியும் வாழ்க்கை யுடையராகிக் காமக்கிழமை பூண்டு இல்லற நிகழ்த்தும் பரத்தையர்’ (தொல். கற்பு. 10, ந.)
(39) முறைபிறழ்தலாவது மகண்முதலிய முறையுடையாரோடு கலத்தல்.
(42) ஞானவல்லி - ஞானமாகிய பெண்.
(43) ஞேயத்து அரும்பொருள் - அறியப்படுவதாகிய அரிய பொருணை.
(44) இறவா வீடு - முத்தி.
(45) குறையாச் செல்வர் - முத்திச் செல்வத்தை யுடையோர்.
|