பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை377

484.
திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு
திருமார்பி லாரமும் பாம்பு - பெருமான்
திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்திற் கங்கணமும் பாம்பு.

    இது குறளிரண்டாய் இடையே தனிச்சொற் பெற்று ஒரு விகற்பமாய் நடத்தலின் ஒரு விகற்பத்து இருகுறணேரிசை வெண்பா. அடி தோறும் ஈற்றுச்சீர் ஒரு சொல்லே வரத் தொடுத்தமையால் அடியியைபு. இது காசென்னும் வாய் பாட்டுக் குற்றியலுகர இயற்சீரான் முடிந்தது.    
(4)

485.
கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்
இறைவி நறுநுதலைக் கண்டு - பிறைமுடியோன்
கைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்
அம்மான் விழிமானைக் கண்டு.

    இதுவும் அவ்வாறே இருவிகற்பத்தால் நடந்தமையான், இருவிகற்பத்து இருகுறணேரிசைவெண்பா. அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் அடியெதுகை. இதனுள், முதற்றொடை இரண்டா மெழுத்து மாத்திரையே ஒன்றத் தொடுத்தமையால் இடையா கெதுகையுமாம்.    
(5)


    பிறரை வெல்லுங் கூற்று; அவனையும் இவர் வெல்வ ரென்றபடி. கொளல் இல்லையென்க.

    484. கண்ணி - அடையாள மாலை. மாலை - திருமுடியிற் சுற்றப்பட்ட மாலை. ஆரம் - மார்பிலுள்ள முத்து மாலை. கச்சை - இடையிற் கட்டிய கச்சு; “கச்சையாவதொர் பாம்பினார்” (தே. திருஞா, திருநெல்வாயில்); “கச்சைசே ரரவர் போலும்” (தே. திருநா.) புயம் - திருக்கை. கங்கணம் - காப்பு.

    485. கறை - விடம். திங்கள் - இங்கே பிறை. திங்கள் உமாதேவியாரின் யாண் மாசிலா வாண்முகங்கண் டேக்கற்றோ,...வளராவாறென்னோ மதி” (தண்டி, மேற்.) நடம் உவந்த - நடராசப் பெருமான் திருநடனத்தைத் தரிசித்து மகிழ்ந்த. காற்புலி - காலாற் புலியாகிய வியாக்கிரபாதர்; “காற்புலித்தோன் மயிர்முகிழ்ப்ப” (திருபெருந்ததுறைப். கடவுள்.6) அம்மான்; மான் - உமாதேவியரது, விழியாகிய மானை. கைம்மான் அஞ்சும். கையிலுள்ள மான் தன் பகையாகிய ஒரு புலிக்கு அஞ்சாமல் இனமாகிய மற்றொரு மானுக்கு ஆஞ்சுமென்றது நயம்.