பக்கம் எண் :

382குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

494.
பொன்மன்றம் பொற்றா மரையொக்கு மம்மன்றிற்
செம்ம றிருமேனி தேனொக்கு மத்தேன்
உண்டு களிக்குங் களிவண்டை யொக்குமே
எம்பெரு மாட்டி விழி.

    இதுவும் பலவிகற்பத்து இன்னிசை வெண்பா. இதன் முதலடியிரண்டும் மூன்றாமெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால், மூன்றாமெழுத்தொன்றெதுகை.    
(14)

495.
ஆடகச் செம்பொ னணிமன் றுடங்கொண்ட  
பாடகச் சீறடியாள் பாகத்தான் - சூடகக்கைக்  
கங்கையாள் கேள்வன் கழறொழூஉக் கைகூப்பி  
நின்றிறைஞ்சச் சென்றிறைஞ்சுங் கூற்று.  

    இதுவும் இரண்டாமடியின் இறுதி தனிச்சொற்பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. இதன் மூன்றாமடி முதற்சீரும் மூன்றாஞ்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் பொழிப்புமோனை. இதனுட் செம்பொ எனத் தேமாவும், அணிமன் என்ப் புளிமாவும், கழறொழூஉ எனக் கருவிளமும், ஆடகச் எனக் கூவிளமுமாக ஆசிரியவுரிச்சீர் நான்கும் வந்தன.    
(15)

496.
காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு
பேதுற்றார் நெஞ்சும் பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்
போதம் படரும் புலியூரே - தாதுண்டு
வண்டுறங்கு நீள்சடையோன் வைப்பு.

    இது மூன்றாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. இதன்முதலடி இரண்டாமெழுத்துத் தகர அகரமும், இரண்டாமடி இரண்டாமெழுத்துத் தகர உகரமுமாக வந்தமையால் வருக்க வெதுகை.        
(16)


    494. செம்மல் - சிவபெருமான்; அவர் திருமேனி செந்நிற முடையதாதலின் நிறத்தாலும் தேனையொத்தது; 477-ஆம் செய்யுளைக் காண்க; “உமையாட் கென்றுந் தேனவன்காண்” (தே. திருநா. வலிவலம்)

    495. ஆடகமென்பது பொன்னில் ஒருவகை. பாடகம் - மகளிர் காலில் அணியும் ஒருவகை யாபரணம். சூடகம் - காப்பு. இறைஞ்சினாரைக் கூற்று இறைஞ்சும்.

    சிதம்பர தரிசனம் செந்தாருக்கு யமபயமில்லை யென்றபடி

    496. பேதுற்றார் - மயக்கமடையதோர், பிழைத்து அகன்றார் மகளிர் மயக்கினின்றும் தப்பி நீங்கினோர்; இவர்கள் தூய சிந்தையினராதலின் இவர் நெஞ்சை நன்னெஞ்சு என்றார். பேதுற்றார் நெஞ்சு போது அம்பு அடரும் - மயங்கினாரது நெஞ்சம் காமனது மலர்ப்பாணத்தால் துன்