பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை383

497.
காம ருயிர்செகுக்குங் கண்ணொன்றே - காமருசீர்
மாதர் நலனழிக்குங் கண்ணொன்றே - மாதருக்
கின்னா விரவொழிக்குங் கண்ணொன்றே - இந்நிலத்தில்
தன்னே ரிலாதான் றனக்கு.

    இஃது அடிதோறும் ஒருஉத்தொடையமைய முதல் மூன்றடிகளினும் தனிச்சொற்பெற்றுப் பலவிகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. இதன் மூன்றாமடி ஈற்றயற்சீரொழிந்து ஏனைமுச்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கீழ்க்கதுவாய் மோனை.        
(17)

498.
செக்கர்ச் சடையிற் பசுங்குழவு வெண்டிங்காற்
முக்க ணொருவற்கு நின்னோ டிருசுடரும்
அக்க ணொருமூன்று மாயின்மற் றுய்வுண்டே
மைக்கண் மடவா ருயிர்க்கு.

    இஃது ஒருவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடைவெண்பா. இதன் முதலடி இரண்டாஞ்சீரொழிந்து ஏனை முச்சீரும் முரணத் தொடுத்தமையால் மேற்கதுவாய் முரண். இரண்டாமடி ஈற்றயற் சீரொழிந்து ஏனைமுச்சீரும் முரணத் தொடுத்தமையாற் கீழ்க்கதுவாய் முரண். இது பிறப்பென்னும் வாய்பாட்டுக் குற்றுகர இயற்சீரான் முடிந்தது.         
(18)


னெஞ்சு போதம் படரும் - நல்ல நெஞ்சத்தில் சிவஞானம் பரவுகின்ற. இது சிலேடை. வண்டு தாதை உண்ணுதல், “தாதுண்பறவை பேதுறலஞ்சி” (அகநா. 4) என்பதனாலும் பெறப்படும். வைப்பு - எழுந்தருளியுள்ள இடம்.

    497. காமர் - மன்மதனது; பன்மை இகழ்ச்சிக் குறிப்பு (திருச்சிற். 164). அவன் உயிரைச் செகுத்தது நெற்றிக்கண். மாதர் நலன் - காதலரைப் பிரிந்த மகளிரது அழகை. அதனை அழிக்குங் கண்ணாவது இடத் திருக்கண்ணாகிய சந்திரன். இன்னா இரவு: “இன்னா விரவி னின்றுணையாகிய” (குறுந். 266:2) இரவொழிக்கும் கண்ணென்றது வலத்திருக்கண்ணாகிய சூரியனை. தன்னேரிலாதான்: “தன்னை நேரொப் பிலாத தலைவனை” (தே. திருநா. திருப்புகலூர்.)

    498. தலைவி காமமிக்க கழிபடர்கிளவியால் நிலவை நோக்கிக் கூறுதல்: இதனைச் சந்திரோபாலம்பனமென்பர்.

    ‘சிவபெருமான் நின்னோடு சூரியனையும் அக்கினியையும் இரண்டு கண்களாக உடைமையின் உயந்தேம்; நீயே அம் முக்கண்களாகவும் இருப்பின் எமக்கு உய்வே இல்லை’ என்று சந்திரனை நோக்கிக் கூறுகின்றாள். முன்னர்ப் பாட்டிற் கூறியவாறு மாதருக்குப் பகையாகிய காமனையும் இரவையும் போக்குவனவாதலின் முறையே அக்கினியும் சூரியனும் மகளிரால் வெறுக்கப்படாதனவாயின. செக்கர் - சிவப்பு. உண்டே: இல்லையென்றபடி.