பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை389

508.
கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்  
மழுவலத்தன் மானிடத்த னென்னும் - முழுவலத்த  
மன்றுடையான் றார்வேட்ட மான்.  

    இது பலவிகற்பத்து இன்னிசைச் சிந்தியல்வெண்பா. இதன் முதற்றொடை இரண்டாமெழுத்தின்மேல் நின்ற உயிரொன்றத் தொடுத்தமையால் உயிரெதுகை. இதன் முதலடி இறுதிச் சீரொழிந்து ஏனைமுச்சீரும் முரணத் தொடுத்தமையால் கூழை முரண்.    
(28)


509.
செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்
தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே.

    இது விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடைத்தாய் அடியிரண்டாய்த் தம்மில் ஒத்துவந்தமையால் குறள்வெண் செந்துறை.     
(29)

510.
கம்பைமாநதியின்கரைச்சிறு கன்னிபார முலைத்தழும்பணி
உம்பர்கோன்விடை யொன்றுல கேழு முண்டதுவே.

    இஃது அடியிரண்டாய்ச் சீர்வரையறையின்றி ஈற்றடி குறைந்து எந்தமையால் குறள் வெண்டாழிசை.    
(30)


    சூழ்ந்து - சுற்றப்பட்டு, எண்ணி; சிலேடை. சடிலம் - சடை. பொன்பூத்த - பொன்னிறத்தை யடைந்தன, பசலை நிறத்தைப் பெற்றன. இறைவன் திருத்தாரை வேட்டு நின்று விரகதாபத்தாற் பசலையுற்ற தலைவி கூறியது இது.

    (பி-ம்.) ‘தம்பொற் புயம்’.

    508. மழுவலத்தின் - மழுப்படையை வலத்திருக்கரத்திலே ஏந்தியவர். முழுவலத்த - பூரணமான வெற்றியையுடைய; இது மன்றுடையானுக்கு அடை. மான் - தலைவி.

    இது செவிலி கூற்று; தோழி கூற்றுமாம்.

    509. மணிமன்றம் - அழகிய சிற்றம்பலம். அம் பொன் மேரு நடராசப் பெருமான்; பொன்னிறமுடையாராகலின் மேருவென்றார்; “பொன்னார் மேனியனே” (தே. சுந்தர.); “பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி பொலிந்திலங்கும்” (பொன்வண்ணத். 1). அடி முடி இன்று - ஆதியும் அந்தமும் இல்லை; இன்றென்பதைத் தனித்தனியே அடியோடும் முடியோடும் கூட்டிப் பொருள் செய்க, ஒருமையாதலின்.

    510. கம்பைமா நதி - காஞ்சீபுரத்திலுள்ள கம்பாநதி. சிறு கன்னி - காமாட்சி அம்மை. காஞ்சீபுரத்தில் காமாட்சியம்மை தழுவ இறைவன்