பக்கம் எண் :

4.
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

18. தொன்னூற் பரசமயந் தோறு மதுவதுவே
நன்னூ லெனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்
19. விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாபோகஞ் சார்வித் - தருள்பெருகு்
20. சாலோக சாமீப சாரூப மும்புசிப்பித்
தாலோகந் தன்னை யகற்றுவித்து - நால்வகையாம்
21. சத்தநி பாதந் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
22. மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - உலவா
23. பறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
24. கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்
19. சரியை கிரியா யோகம் - சரியையும் கிரியையும், யோகமும்.
18-9. “புறச்சமய நெறிநின்றும்” (சிவஞான சித்தியார், சுபக்கம், சூ. 8:11) என்னுந் திருவிருத்தத்தால் இக்கண்ணிகளின் கருத்து விளங்கும்.
20. புசிப்பித்து - அனுபவிக்கச் செய்து. ஆலோகம் - தெளிந்த அறிவு. அகற்றுவித்து - விரிவடையச் செய்து. ஆலோகம் என்பதை அலோகமென்பதன் விகாரமெனக்கொண்டு ஆலோகந்தன்னை யகற்று வித்தென்பதற்கு அழியாமையை நீக்கியெனப் பொருள் கோடலும் ஆம்; அலோகம் - அறியாமை.
20-21. சத்தி நிபாதம் - சத்தி பதிதல். நால்வகையாம் சத்திநிபாதம் - மந்ததரம்,மந்தம்,தீவிரம், தீவிரதரமென்ற நான்குவகைப் பக்குவங்கள்; “பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலாம், சத்தி பதிய” (திருவிளை.வாதவூரடிகளுக்குபதேசித்த படலம், 31.) இருவினையும் ஒத்துவருங்காலம் - இருவினை யொப்பு உண்டாகுங் காலம்; “வினை யொத்தபின், கணக்கிலாத்திருக்கோல நீவந்து காட்டி னாய்கழுக்குன்றிலே” என்பது திருவாசகம் பெத்தம் கட்டு.
22. மலபரிபாகம் - மலம் அழிதற்குரிய பக்குவநிலை. அலமுருதல் - சுழலுதல்.
23. பிறியா - பிரியாத
24. காசினிக்கே - பூமியில்; உருபு மயக்கம். சிவபெருமானே குருபரனாகி எழுந்தருளி அருளுவரென்பது ஆகமநூற்றுணிபு; “ அருபரத்தொருவ னவனியில் வந்து, குருபர னாகி யரிளிய பெருமையை” (திருவாசகம் - போற்றித் திருவகவல்) திருநோக்கால் - சக்ஷுதீக்ஷையால்.