பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா5

25.
ஊழ்வினையைப் போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்
ஏழுமத்து வாக்க ளிருமூன்றும் - பாழாக
26.
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்
27.
அடிஞானத் தாற்பொருளு மான்மாவுங் காட்டிக்
கடியார் புவனமுற்றுங் காட்டி - முடியாது
28.
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகியெங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்
29.
வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்பம் - மருவுவித்துக்
30.
கன்மமலத் தாரக்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சாடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
31.
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த

    25. ஊழ்வினை - இங்கே சஞ்சிதம்,உடல் அறுபத்தெட்டும் தூல தேகக்கருவிகள் அறுபதும் சூக்கும தேகக்கருவிகள் எட்டும். நிலம் ஏழும் - ஆதாரம் ஆறும் அதற்கு மேலுள்ள சூனியாகாசமும்; “ஆதியாதார மாதி யடுக்கெனப் பன்னி றத்த, சோதியேழ் நிலைகள்”, எந்நிலங்களினு மிக்க வெழுநிலம்” எனப் பிறரும் கூறுதல் காண்க.

    26. ஆணவம் - ஆணவ மலம், படலம் - கண்ணொளியை மறைப்பதொரு நோய்; “ஞானக்கண் காட்டி” எனக் கூறுதலால் “படலங் கிழித்து” என்கிறார்.

    30. கன்ம மலத்தார் - பிரளயாகலர்.

    30-31. மின் இடத்துப் பூத்த - ஒருமின் இடப்பக்கத்திலே தோன்றிய; மின் என்றது உமாதேவியாரை. மலர்க்கண் மூன்றும் .............வடிவாகி; முருகக் கடவுளும் சிவபிரானும் வேறல்லராகலின் இங்கே இவ்வாறு கூறப்பட்டது; இதனை, “செறியும் பரமசிவமாய்”, ஐந்தெழுத்தைக் கூறி நடாத்துங் கூரகதமும்”. “ஐந்து முகத்தோ டதோமுகமுந் தந்து .....................உய்ப்ப” (4, 69, 76-7), “ஆதலி னமது சக்தி யறிமுக னவனும் யாமும், பேதக மன்றானம்போற் பிரிவிளன் யாண்டு நின்றான்” (கந்த. திருவிளை. 19.) என்பவற்றாலும் உணரலாகும். மூத்த - அநாதி காலமாகத் தொடர்ந்த, கன்ம மலத்தார்க்கு .................விடைமேல் ...................... வடிவாகி: “ஏற்றுக்,