| இகல்விழி மகரமு மம்மக ரம்பொரும் | | இருமக ரமுமாட | | இடுநூ புரவடி பெயரக் கிண்கி | | ணெனுங்கிண் கிணியாடத் |
| துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல் | | துவண்டு துவண்டாடத் | | தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர் | | சூலுடை யாலடைமற் |
| றகில சராசர நிகிலமொ டாடிட | | ஆடுக செங்கீரை | | அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் | | |
20. | தசைந்திடு கொங்கை யிரண்டல வெனவுரை | | தருதிரு மார்பாடத் | | தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு | | ததும்புபு னகையாடப் |
| பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர் | | பச்சுடல் சொல்லவுமோர் | | பைங்கொடி யொல்கவு மொல்கி நூடங்கிய | | பண்டி சரிந்தாட |
(2) விழியாகிய மகரம்; விழிக்கு மகரமினைக் கூறியது மீனென்னும் பொதுமைப்பற்றி; “மகரக் கருங்கட் செங்கனிவாய் மடமான்கன்று” (61.) இருமகரம- இரண்டு மகர வடிவமான குண்டலங்கள். நூபுரம் - காலணி.
(3) கொடியைப் போன்ற நுண்ணிய மருங்குல்; மருங்குல் - இடை. உந்தியினிடத்தே யாவற்றையும் கரந்து ஒளிரும் சூலையுடைய ஆலிலை போன்ற திருவயிறு: ஆலடை - ஆலிலை. (பி-ம்.) ‘சூலுடையாலிலை.
(4) அகிலம் - அழிவில்லாதவை. நிகிலம் - உலகம் யாவும்.
20. (அடி, 1) இரண்டலவென்றது மூன்றென்னும் குறிப்பையுடையது. குழந்தையைத் தாயே வருக வென்பவர், அச்சொல்லுக்குச் செம்பொருள் கொள்ளாமல் மகளென்று பொருள் கொள்வர்; அம்பிகையை அழைப்பவரும் அங்ஙனமே கொண்டனர்; தாயென்னும் சொல்லுக்குச் செம்பொருளே கொள்ளல் இங்கே ஏற்புடைத்தாயினும் உலக வழக்குப்படியே மகளென்று கொள்வாராதலின் அதனைப் பேதைமையென்றார். ததும்பு - மேல் எழுந்த. (பி-ம்.) ‘நன்னகை’,
(2) பசைந்திடு ஞாலம் - தேவியின் அன்பைப் பெற்ற உலகம். அலர்ந்தமை - வெளிப்பட்டமை. இயல்பான பச்சுடலை மகவீன்றாரது பச்சுடலாகக் கூறினர். பைங்கொடி யென்றது திருவிடையை. பண்டி - வயிறு.
|