பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை419

5.
தாமடிகண் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல
மாமடிகள் யாமடிகண் மறவாமை யுடையமே.
6.
பலகலையுங் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளா
துலகலையுஞ் சிலைகலையு முணராதே முணர்துமே.

அதனால்

-சுரிதகம்-
அம்மநின் றன்மை யெம்மனோ ருணர்தற்    
கரிதே யெளிதே யாதல்    
பெரிதே கருணை சிறிய மாட்டே.    

    இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.    
(67)


-தரவு-
548.
1.சூன்முகத்த கரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய்
வான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக்
கான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த்
தேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய்.
2.
புற்புதமுந் தொல்வெய்த நிலையெய்தாப் புலையுடம்பின்
இற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு
நற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன்
அற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள்.


    5. அடிகளைத் தாம் மறந்து. மறித்தலை - ஆட்டின் தலை. மாமடிகள் - மாமனார்; என்றது தக்கனை (355, 375).

    6. உலகு பயன் கொள்ளாது; உலகு - உயர்ந்தோர்.

    அதனால் என்றது தனிச்சொல்.

    (சுரிதகம்) அம்ம: வியப்பிடைச் சொல். அரிதே: ஏகாரம் தேற்றம். அங்கனம் அரிய நின்தன்மை எங்கள்பால் எளியதாவதற்குக் காரணம் நின் பெருங்கருணையே யாகும்.

    548. (தரவு.) 1. சுரிமுகங்கள் - சங்குகள். நிரைத்து - வரிசையாக இருந்து. மழைக்குலங்கள் - மேகக் கூட்டங்கள். கான்முகத்த மதுகரத்தின் குலம் - காட்டிலேயுள்ள வண்டின் கூட்டம். கடி - நறுமணம். வண்டின் கூட்டத்ததிற்கு மேகம் உவமை; பொழிலுக்குக் கடல் உவமை; “கடல் போற் றோன்றல காடிறந்தோரே” (அகநா. 1:19)

    2. புற்புதமும் தொலைவு எய்த - நிலையாமையில் நீர்க்குமிழியும் உவமையாகாமல் தோல்வியுற. புலை - இழிவு. உடம்பின் நிலையாமைக்கு நீர்க்குமிழியை உவமை கூறுதல் மரபு; “படுமழை மொக்குளிற் பல்காலுந்