பக்கம் எண் :

420குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

-தாழிசை-
1.
எவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ
வெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே.
2.
எண்பயிலா வுலகடங்க வொருநொடியி லெரித்திடுநீ
விண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே.
3.
பெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை
பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே.
4.
மாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர்
சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே.
5.
மேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல்
மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே.
6.
ஓருருவாய் நிறைந்த நீ யிருவர்க்கன் றுணர்வரிய
பேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே.

-அராகம்-
1.
அறிவினி லறிபவ ரறிவதை யலதொரு    
குறியினி லறிவுறு குறியினையலை.    


    
தோன்றிக,் கெடுமிதோர் யாக்கை” (நாலடி. 27); “மாரி மொக்குளின் மாய்ந்து” (சீவக, 409.) உடம்பின் இல் புதவு திறந்து - உடம்பாகிய வீட்டின் வாயிலைத் திறந்துகொண்டு; “புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு” (குறள், 340). (பி-ம்.) ‘இற்புதவு புறந்து’. இன்ப வீடு - முத்தி. புதவு - வாயில். பொடுவில் - அம்பலத்தில். அற்பு உதவும் - அன்பை அளிக்கும். நடன தரிசனம் செய்தவர் உளமுருகி அன்பு பூண்பராதலின் ‘அற்புதவுமானந்த நடம்’ என்றார்; 503-ஆம் செய்யுளைப் பார்க்க. அறவோய் - தரும மூர்த்தி; “அறவன் கழல்சேர்ந் தன்போடின்ப மடைவாரே” (தே. திருஞா. அரிசிற்கரைப்புத்தூர்.)

    (தாழிசை.) 1. வியப்பு ஆமே - வியப்பு ஆகுமா? ஆகாதென்றபடி.

    2. உலகடங்க எரித்தலாவது சர்வ சங்காரம் செய்தல். எயில் மூன்று - திரிபுரங்கள்.

    3. பெருவெள்ளத்தையுடைய பகிரண்டத்தை. இறைவன் அண்டங்கள் மாலையாக அணிந்தானென்பர்; தாராக வண்டந் தொடுத்தணிந்தார்” (தக்க. 772.)

    4. முனிவர் சேயிழையார் - தாருகாவனத்து முனிவருடைய மனைவிமார்.(அராகம்.) 1. ஒரு குறியினில் - ஓர் அடையாளத்தால்; ஒரு பெயராலெனலுமாம். குறியினை அலை - உருவத்தை உடையாயல்லை.