2. | உளவயி னுளவள வுணர்வதை யலதுரை | | அளவையி னளவிடு மளவினையலை. | 3. | அருவெனி னுருவமு முளையுரு வெனினரு | | வுருவமு முளையவை யுபயமுமலை. | 4. | இலதெனி னுளதுள தெனினில திலதுள | | தலதெனி னினதுரு வறிபவரெவர். |
-தாழிசை- 1. | எத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து | | மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே. | 2. | சீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற் | | பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே. | 3. | மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற | | அத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே. | 4. | இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த | | அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே. | 5. | எவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே | | அவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே. | 6. | நின்னலா தவளில்லை யவளலா னீயில்லை | | என்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால். |
2. உளவயின் - உள்ள விடத்தே; உள்ளத்தின்கண்ணே யெனலுமாம். உரையளவையின் - சொல்லளவினால்.
3. அருவுருவமும் - அரூபமாகிய வடிவமும்; அவை உபயமும் - உருவமும் அருவமுமாகிய அவ்வரண்டும்.
(தாழிசை.) 1. கரணங்கள் - மனம், வாக்கு, காயமென்பன. ஐந்து மெய்த்தொழில் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகமென்பன.
2. சீர் ஆட்டு - சிறப்பை யுடைய நடனம். பேராட்டி - சிவகாமவல்லி.
3. மெய்த்துயரம் - உடம்பினாலாகிய துயரம்; என்றது பிறவிப் பிணியை.எய்தும் - அடைதற்குக் காரணமாகிய. விளையாட்டு - சிருட்டி முதலியன. பொருட்டே - ஆன்மாக்கள் உய்தற்பொருட்டே.
4. எத்தொழிலும் இன்னருளே என இயைக்க.
|