இஃது இரண்டடியாய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு வந்த கலித்தாழிசை.
அதனால் என்பது தனிச்சொல்.
தமர் - உறவினர்.
எனவாங்கு என்பது தனிச்சொல்.
(சுரிதகம்.) மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம். மலர்க் குரம்பையில் - அழுக்கு நிறைந்த குடிசையாகிய உடம்பில். செம்மாந்து - தருக்குற்று.மெய்ம்மையிற் பொழிந்த வீடு - என்றும் அழியாது மெய்த்தன்மையோடு விளங்கும் முத்தி. பிறவிநோய் தீர்ந்து வீடு பெறும்பொருட்டு இறைஞ்சுவோமென்றார்.
549. பொல்லாமணி - துளையிடாத மாணிக்கம் போன்றவர். முகிலூர்தி - இந்திரன். புத்தேளிர் போல - புத்தேளிர் புகழ்வது போல. கற்பக்கன்று - கற்பக விநாயகர் (45). தில்லை வனத்திலுள்ள கற்பகமென்றது நடராசப் பெருமானை (521).