இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து நெட்டெழுத்து வரத்தொடுத்தமையால் நெடிலெதுகை. முதலெழுத்து நெட்டெழுத்தே வரத் தொடுத்தமையால் நெடின் மோனையுமாம். மூன்றாமடியும் நான்காமடியும் முதலெழுத்து அனுவெழுத்தாய் வந்தமையின் அனுமோனை.
556. | வையமீன்ற மறைக்கிழவனும் |
| கொய்துழாய்மவுலிக் குணக்கொண்டலும் |
| தருவார்நீழற் றார்வேந்தனும் |
| வரன்முறைதாழ்ந்து வாழ்த்திசைப்ப |
| மைதீருணர்வின் மழமுனிவனும் |
| பையரவரசும் பணிந்திறைஞ்ச |
| இமயம்பயந்த விளங்கொடியொடும் |
| தமனியப்பொதுவிற் றாண்டவம்புரி |
| தில்லைவாணநின் றிருவடிக்கீழ்ச் |
| சொல்லுவதொன்றிது சொலக்கேண்மதி |
| கமலலோசன்ன் கண்படுக்கும் |
| அமளியைநின்மருங் காதரித்தனை |
555. கூகாவென்று குரைபத்தால் - யமன் வந்த காலத்தில் அஞ்சிக் கூகாவென்று கதறுவதல்லாமல்; “கூகாவெனவென்கிளைகூ டியழ” (கந்தரநுபூதி.)வரேமென வல்லிரே - வாரோமெனக் கூறும் வன்மை உடையீராவீரோ? அது செய்யவும் - வாரோமெனக் கூறுதற்கும். வல்லிரே: ஏ, தேற்றம்.
556. மறைக்கிழவன் - பிரமதேவர். குணக்கொண்டல் - குணத்திற் சிறந்த மேகம் போன்ற திருமால்; “உயர்வற வுயர்நல முடையவன்” (திருவாய்மொழி). தரு - கற்பகம். வேந்தன் - இந்திரன். மைதீர் உணர்வின் - குற்றம் தீர்ந்த மெய்ஞ்ஞானத்தையுடைய. மழமுனிவன் - உபமன்னியு முனிவராகிய குழந்தையையுடைய வியாக்கிரபாதர்; மழவை யுடைய முனிவனென்க. பையர வரசு - பதஞ்சலி முனிவர். பமல்லோசன்ன் - திருமால். அமளியை - படுக்கையாகிய ஆதிசேடனை; என்றது அவனது