பக்கம் எண் :

426குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

செங்கேழ்நறுநுதற் றிருமகளொடும்
அங்கவ னுறைதரு மாழிச் சேக்கையைப்
புலிக்கான்முனிவரன் புதல்வனுக்கு
நலத்தகுகருணையி னயந்தளித்தனை, அவன

அதனால்
பாயலு ம்மளியு மின்றி மன்றநின் 
வாயிலி னெடுநாள் வைகின னணையொடும் 
அத்திரு மனையவற் களித்திநின் 
மெய்த்தொழி லன்றே வீடு நல்குவதே. 

    இது குறளடி வஞ்சிப்பா. இதன் அடிதோறும் முதற்கண்ணே பொதுச்சீர் பதினாறும் வந்தன. தார்வேந்தனும் எனவும், குணக் கொண்டலும் எனவும், மறைக்கிழவனும் எனவும், தாண்டவம்புரி எனவும் வஞ்சிச்சீர் நான்கும் வந்தன. இதனுள்ளே அங்கவ னுறைதரு மாழிச் சேக்கையை என ஆசிரியவடி அருகி வந்தது. அவன் என வஞ்சியீற்றின் கண் அசை கூனாய் வந்தது.    
(76)

557.
கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலந்தர
அடித்தாமரைச் சுடர்ப்பரிதி யருந்தருளினை

அதனால்
புதுமலர்ப் பொழிற்றில்லை வாண 
உதவியின் வரைத்தோ வடகள்கைம் மாறே. 

    இது சிந்தடி வஞ்சிப்பா.    
(77)


அவதாரமாகிய பதஞ்சலி முனிவரை. செங்கேழ் - செந்நிறத்தையுடைய. அவன் - திருமால். ஆழிசசேக்கையை - திருப்பாற்கடலாகிய உறைவிடத்தை. புதல்வன் - உபமன்னியு முனிவர். உபமன்னியுவுக்குப் பாற்கடலீந்தது: 463, 562; “பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கட லீந்தபிரான்” (திருப்பல்லாண்டு.) பாயலும் அமளியும் இன்றி - படுக்கையும் கட்டிலும் இல்லாமல் (463). நின் வாயிலின் வைகினனென்றது தில்லைத் திருக்கோயிலின் முன்றிலில் கோவிந்தராசப் பெருமாள் எழுந்தருளி யிருப்பதை நினைந்தது. அத் திருமனை - அந்த அழகிய இருப்பிடமாகிய பாற்கடல். வீடு - முத்தி, இல்லம்.

    557. தாமரைக் கண்ணன் - திருமால். அடித் தாமரையின் கண் விழிக் கமலம் தர. சுடர்ப்பரிதி - ஒளி வீசும் சக்கராயுத்ததை; தாமரைக்கு இயைபுடையதாகலின் சுடர்வீசும் சூரியனையென வேறொரு பொருளும் தோற்றியது. உதவியின் வரைத்தோ: “உதவி வரைத்தன் றுதவி யுதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்து” (குறள், 105.)