இது சிந்தடி நான்காய் வந்தமையால் வஞ்சி விருத்தம்.
558. (1) பிணியென்று பெயராமே - நோய்க்கு இடமாகுமென்று அஞ்சி நீங்காமல். துணி - பிளந்த பாறை. ‘துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு தவஞ்செய்பவர்களே, இவ்வளவு துயரின்றி எளிதிலே பயன் பெறும்வழி இஃதாகும்’ என்று கூறியபடி.
(2) கல் - மலை.
559. கொன் - பெருமை.
560. மேவருந் தில்லை சென்றும் - யாவரும் மேவுதற்கு அரிய தில்லைத் தலத்தின்கண் சென்றோம்; (ஆதலின்) பரலோகமே ஒன்றினம் - எல்லா